ராட்சசியின் அசிங்கமான செயல்! தள்ளுவண்டி காரரின் பரிதாபநிலையை பாருங்க... இப்படியும் பெண்ணா?
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் தனது கார் மீது தள்ளுவண்டி இடித்ததற்காக அந்த வண்டியில் இருந்த பப்பாளிப் பழங்களை பெண் ஒருவர் சாலையில் வீசி எறிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
அயோத்தியா நகரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றுகின்றாராம்.
குறித்த பெண் தள்ளுவண்டிக்காரருடன் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் விற்பனைக்கு வைத்திருந்த பப்பாளி பழங்களை சாலையில் பந்து போல வீசி எறிந்தார்.
அந்த தள்ளுவண்டிக்காரர் கெஞ்சியும் அவர் பொருட்படுத்தவில்லை. சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அந்த பெண்ணை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை.
அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறித்த பெண்னின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றது.