சுடுகாடாக மாறிய பூங்கா! கொத்து கொத்தாக செத்து விழும் மக்கள்- கண்கலங்க வைக்கும் காட்சிகள்
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் அதிகளவில் வருவதால் பூங்காவை சுடுகாடாக மாற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவிவரும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 201 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 380 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், பலியானவர்களின் உடலை எரிக்க சுடுகாடுகளில் 24 மணிநேரமும் கூட்டம் அலை மோதுகின்றன.
இதை கட்டுப்படுத்துவதற்காக, தென் - கிழக்கு தில்லியின் சாராய் காலே கான் பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தகன மேடைகளாக மாற்றியுள்ளனர்.