INDvsRSA: 2 வது போட்டியில் வெற்றி பெற இந்திய அணியின் ப்ளான் என்ன? ப்ளேயிங் 11-ல் அதிரடி மாற்றம்;
ஐபிஎல் போட்டி நிறைவடைந்த பின் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் சொந்த நாட்டில் விளையாடி வருகிறது.
முதல் போட்டியில் படு தோல்வியை இந்திய அணி சந்தித்ததால், 2வது போட்டியில் வெற்றி பெற பல வியூகங்களில் களமிறங்கும். 5 டி20 போட்டிகளில் விளையாடு இந்திய அணிக்கு 2வது போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது.
கேல் எல் ராகுல் காயம் காரணமாக விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டன்ஷி செய்திருந்தார். பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக இருந்தாலும், பவுலிங்கில் பயங்கரமாக சொதப்பி இருந்தது.
டெல்லி அணிக்கு எதிராக கேப்டன் பதவியில் இருந்த ரிஷப் அப்போதே நிறைய சொதப்பி இருந்தார். பதற்ற நிலை வந்துவிட்டால் அவருக்கு கேப்டன் ஷி செய்ய கடினமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
ரன்களை வாரி வழங்கும் பவுலர்களுக்கே தொடர்ச்சியாக ஓவரை கொடுத்தார். 5 பவுலர்களை பயன்படுத்தினார். 2, அல்லது 3 பவுலர்களை பயன்படுத்திவிட்டு இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு முக்கிய பவுலர்களை களமிறக்க தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.

ரிஷப் பண்ட்டின் மாற்றம்
இந்திய அணியை பொறுத்தவரை அனைத்தும் சூப்பரான ப்ளேயிங் 11 எடுத்ததே தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஏனென்றால், சாஹல் வீசிய ஓவரில் எந்தவிதமான விக்கெட்டுகளும் விழாமல் இருந்தது பெரிய அடியாக அமைந்தது.
எனவே இந்திய அணியில் பவுலர்களிடம் மாற்றம் இருக்கும் என இன்றைய போட்டியில் எதிர்பார்க்கப்படுகிறது. எதிரணியை பொறுத்தவரையில், டேவிட் மில்லர் தான் தற்போது அச்சுறுத்தலாக இருக்கிறார்.

பயங்கரமான கம்பேக் ஃபார்மில் இருக்கும் அவரை எடுக்க கட்டாயம் ஒரு நல்ல ஸ்பின்னரை கொண்டு அவரிடம் பயன்படுத்துவதே சிறந்ததாக இருக்கும்.
அதேப்போல், இந்திய அணி ப்ளேயின் 11-ல் சில மாற்றங்கள் ஏற்படும்.
அதன்படி, தீபக் ஹூடா உள்ளே வரலாம் பந்துவீச்சில், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னேய் வரவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் இந்த அணியை வைத்துக்கொண்டே ரிஷப் மீண்டும் செயல்படலாம்...