INDvsENG: இந்திய அணியை வெளுத்துவாங்கும் ரிஷப் பண்ட் - அணியில் இணைந்த தமிழக வீரர்!
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5 வது டெஸ்ட் போட்டியை விளையாட கடந்த வாரமே தனி விமானம் வாயிலாக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றனர்.
தற்போது, லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக துவங்கிய 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வரும், இந்திய அணிக்கு எதிராக லீசெஸ்டர்ஷைர் அணியுடன் சேர்ந்து ரிஷப் பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா விளையாடி வருகின்றர்.
முதலில் ஆடிய இந்திய அணி, 248 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நிலையில், லீசெஸ்டர்ஷைர் அணி பேட்டிங்கில், 213 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.
Rishabh Pant hits a six against Umesh Yadav.#RishabhPant #LEIvIND pic.twitter.com/3dWWZEo6HT
— Cricket Videos 🏏 (@Abdullah__Neaz) June 24, 2022
அணியில், இந்திய அணியின் வீரர்களான, புஜாரா 0 ரன்களில் அவுட் ஆகி அவர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், ரிஷப் பண்ட் 76 ரன்களை அடித்து ஜடேஜாவின் ஓவரில் அவுட் ஆனார்.
இந்திய அணிக்கு எதிராக அவர்களுடன் பயிற்சியில் விளையாடினாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பண்ட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அஸ்வின் வருகை
மேலும், மிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் கொரோனாவுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
தற்போது லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் பயிற்சி போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும் இதர வலை பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
Hello and welcome to Day 1 of our practice match against @leicsccc #TeamIndia pic.twitter.com/nUilsYz5fT
— BCCI (@BCCI) June 23, 2022