Fake Calls: யார் போன் செய்தாலும் இனி பெயர் தெரியுமா? புதிய நடவடிக்கை
செல்போனில் வரும் அழைப்புகளில் இதுவரை நம்பர் மட்டுமே தெரிந்திருந்த நிலையில், இனி பெயரும் சேர்ந்து தெரிவது போன்ற மாற்றத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போன் செய்தால் பெயர் தெரியுமா?
சமீப காலமாக பல மோடிகள் தொலைபேசி மூலமாக நடைபெற்று வருகின்றது. அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி, ஒலி மூலம் நடக்கும் மோடிகள், டிஜிட்டல் ஹேக் என பல வகைகளில் திருட்டு நடைபெறுகின்றது.
இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல தீர்வுகளை அமல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இனி பரிச்சயமற்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் பின்னணியில் உள்ள நபரின் பெயர் நேரடியாக உங்கள் மொபைல் திரையில் தெரிய இருக்கும்.
இந்த திட்டம் "அழைப்பாளர் பெயர் காண்பிக்கும் வசதி" என்ற பெயரில் அறிமுகமாகவிருக்கிறது. இதற்காக ட்ரூகாலர் போன்ற தனி செயலியை பதிவிறக்கம் செய்ய தேவையில்லை.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த புதிய அம்சத்தை விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளன.
முதலில் வடமாநிலங்களில் இந்த திட்டத்தினை செயல்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் இந்த முறை செயலுக்கு வரும் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |