குகைக்குள் வைரம் தேடி சென்ற நபருக்காக காத்திருந்த சிங்கம்..... கத்தி அலறிய பார்வையாளர்கள்!
சிங்கத்தின் குகைக்குள் நுழைய முயலும் இளைஞனின் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் ஆப்பிரிக்க சிங்கம் வைக்கப்பட்டுளள பகுதிக்குள் யாரும் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
சிங்கம் வைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக அடைப்பிற்குள் 31 வயது நபர் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Man (31y-o) who attempted to enter an African lion's enclosure at Nehru Zoo Park in #Hyderabad was prevented from doing so by staff on duty and handed over to police. @IndianExpress @nehruzoopark1 pic.twitter.com/aauOs2NQcU
— Rahul V Pisharody (@rahulvpisharody) November 23, 2021
அந்த இடத்திற்கு சென்ற அவர், சிங்கம் இருக்கும் இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு பாறையில் அமர்ந்துக்கொண்டிருந்தார்.
அவரின் இந்தச் செயலைக் கண்டு பயந்துபோன அங்கிருந்த பார்வையாளர்கள் அலறத் தொடங்கினார்கள்.
அந்த அதிசய நபரை உள்ளே குதிக்க வேண்டாம் என்று கூச்சலிட்டனர். சிங்கம் அங்கிருந்து உள்ளே சென்ற பிறகு நுழைவதற்காகவே காத்துக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
குறித்த நபர் வைரங்களைத் தேடி மிருகக்காட்சிசாலையில் நுழைந்த கூறப்படுகின்றது.