கம்பி மேல் ஒய்யாரமாக படுத்து உறங்கும் பூனை- சண்டேனாவே ஜாலிதான்; வைரல் வீடியோ
உலகில் பல வினோதமான விஷயங்கள் நடைபெறுவதுண்டு, அதனை காணொளிகள் வாயிலாக கண்டு ரசித்து வியப்படைந்து சிரித்து மகிழ்ந்து வருகிறோம்.
இதனையடுத்து, ஐ.எப்.எஸ் அதிகாரி சுஷுந்த நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பூனை ஒன்று நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள கைப்பிடி மேலே அமர்ந்து உறங்கிக்கொண்டு இருப்பது போல காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த வீடியோவில் அவர் கூறிப்பிட்டு இருப்பதாவது, ஞாயிற்றுக்கிழமை ஆனாலே ஜாலி தான், என்ன செய்வதென்று தெரியாமல் பூனை எப்படி உறங்குகிறது என்பதை பாருங்கள் என்பதை குறிக்கும் வகையில், Sunday Mood என்று தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Sunday mood pic.twitter.com/6Yahb8LEhk
— Susanta Nanda IFS (@susantananda3) September 26, 2021