சுத்தமில்லாத கணவர்! ஒரே வீட்டில் தனித்தனி படுக்கையறையில் வாழும் தம்பதியினர்: குறையாமல் இருக்கும் பாசம்
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதிகள் ஒருவர் ஒரே வீட்டில் படுக்கையறை முதற்கொண்டு தனித்தனியாக பிரித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
20 ஆண்டிற்கு பின்பு கருத்துவேறுபாடு
இங்கிலாந்தின் Wetherby என்னும் பகுதியை சேர்ந்தவர் கிளயர். இவரது கணவர் பெயர் டேவிட். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 21 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இவர்களுக்கு 13 வயதில் மகன் ஒருவரும் உள்ளார்.
டேவிட் மற்றும் கிளயர் ஆகிய இருவருமே, தனிப்பட்ட காரணங்களால், கடந்த 20 ஆண்டுகளாக வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்விற்கு பின்பு ஒரே வீட்டில் இருவரும் வாழ ஆரம்பித்தனர். ஆனால் அப்பொழுதும் அவர்களுக்குள் பிரச்சினை எழுந்துள்ளது.
சுத்தமில்லாத கணவர்
இதுகுறித்து கியார் கூறுகையில், 20 ஆண்டுகள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தாலும் எங்களது திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருந்த நிலையல், ஆனால் தற்போது ஒரே வீட்டில் வாழ்ந்த போது தான் பிரச்சினை எழுந்தது என்று கூறியுள்ளார்.
தான் என்னைச் சுற்றியுள்ள இடங்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வேன். ஆனால் டேவிட் அதனை செய்யமாட்டார்... அசுத்தமாகவ வைத்திருப்பார்... இறுதியில் அவர் இப்படித்தான் என நானும் ஏற்றுக் கொள்ள முடிவு செய்து அதன்படி நடந்தேன்" என கிளயர் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இருவரும் ஒரே வீட்டினை தனித்தனியாக பிரித்து பயன்படத்தி வருவதாகவும், இருவருக்கும் தனித்தனி படுக்கையறை, தொலைக்காட்சி என வாழ்ந்து வருகின்றனராம்.
நாள் முழுவதும் இருவரும் தனித்தனியாக அனைத்து வேலைகளை செய்து வந்தாலும் இரவு நேரம் டின்னருக்கு பிறகு ஒரு 15 நிமிடமாவது இருவரும் ஒன்றாக இருந்து பேசுவதாகவும், எங்கள் இருவருக்கும் இடையே உள்ள அன்பில் எந்தவொரு குறையும் இல்லை என்று இந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.