கர்ப்பிணி மனைவியின் வயிற்றைக் கிழித்த கணவர்: பின்பு அரங்கேறிய கொடூரம்
கர்நாடகாவில் கர்ப்பமான மனைவியின் வயிற்றில் இருப்பது 3வதும் பெண் குழந்தை என்று கோபமடைந்த கணவர் வயிற்றை கத்தியால் கிழித்து கருவை கலைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அரவிந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. குறித்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் விஜயலட்சுமி மூன்றாவது கர்ப்பமாக இருந்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்றும் தனது உறவினர்களிடமும் ஆண் குழந்தை தான் என்று கூறிவந்துள்ளார்.
நாளுக்கு நாள் ஆர்வம் அதிகமாகவே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்று தெரியவந்த நிலையில் பேரதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
இதனால் விஜயலட்சுமியிடம் குழந்தையை கலைக்க கோரி மிகவும் சண்டையிட்டுள்ளார். இவ்வாறு தினமும் சண்டையாக சென்ற நிலையில், சம்பவத்தன்று 2 பேரை அழைத்துக்கொண்டு அபார்ஷன் செய்ய அரவிந்த் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இந்நிலையில் வயிற்றில் உள்ள குழந்தையினை காப்பாற்ற விஜயலட்சுமி பயங்கரமாக போராடியுள்ளார். ஆனால் கத்தியை எடுத்து விஜயலட்சுமியின் வயிற்றினை அறுத்ததோடு, கருவையும் கலைத்துள்ளனர்.
பின்பு விஜயலட்சுமிக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், அப்படியே போட்டுவிட்டு 3 பேரும் எஸ்கேப் ஆகியுள்ளார்.
விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தப்பி ஓடிய 3 பேரையும் பொலிசார் வலைவீசி தேடிவரும் நிலையில், தீவிர விசாணையும் மேற்கொண்டு வருகின்றனர்.