வெயிலால் ஏற்பட்ட கருமையை வெறும் 15 நிமிடங்களில் போக்கணுமா? டாப் 3 ஃபேஸ் பேக்!
பொதுவாகவே பெண்களுக்கு தங்களை அழகாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும், சருமத்தை பராமரிக்கும் எண்ணமும் இயல்பாகவே ஆண்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாக இருக்கும்.
குறிப்பாக தங்களின் முகத்தை அடிக்கடி கண்ணாயில் பார்த்துக்கொள்ளும் பழக்கமும் பெண்களுக்கு தான் அதிகம்.

அப்படியிருக்கையில் முகம் லேசாக பொலிவிழ்ந்தால் கூட உடனே அதற்கு என்ன தீர்வு என உடனே ஆராய்ந்து செயல்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
அதுவும் வெயில் காலம் வந்துவிட்டால் ஒரு 30 நிமிடம் வெளியில் சென்று வந்தாலே முகம் கருமையாகிவிடும்.

அவ்வாறு வெயிலின் தாக்கத்தால் பொலிவிழந்த முகம் உடனே பளிச்சென்று பிரகாசிக்க வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை கொண்டே எவ்வாறு ஃபேஸ் பேக் தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
காபி- தயிர் ஃபேஸ் பேக்

வெயிலால் ஏற்பட்ட கருமையை போக்குவதில் காபி மற்றும் தயிர் சிறப்பாக செயல்படுகின்றது. அதற்கு ஒரு பௌலில் 5 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்து, அத்துடன் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவி, 10 தொடக்கம் 15 நிமிடங்களுக்கு அப்படியே ஊறவிட்டு, அதன் பின்னர் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி, மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
அதனையடுத்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்கைகளையும் வெயிலால் ஏற்பட்ட கருமையையும் சிறப்பாக நீக்கி, சருமத்தின் நிறத்தை மீண்டும் மீ்ட்டுக்கொடுப்பதுடன், சருமத்தை பொலிவாகவும் மாற்றுகின்றது.
தக்காளி ஃபேஸ் பேக்

பொதுவாகவே தக்காளிச்சாறு சரும பராமரிப்பில் முக்கிய இடம்வகிக்கின்றது. இதில், ஏராளமான நன்மைகள் காணப்படுவதுடன் தக்காளிச்சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுப்படன் இது சருமத்தின் கருமையை போக்குவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
தக்காளி ஃபேஸ் பேக்கை தயாரிக்க நன்றாக கனிந்த தக்காளியை அரைத்து உரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக தடவி 15 தொடக்கம் 20 நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைக்க வேண்டும்.
பின்னர் குளிர்ந்த தண்ணீரை கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வெயிலால் சருமம் கருமையடைவதைத் தடுப்பதுடன் ஏற்கனவே ஏற்பட்ட பருமையை போக்கி சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகின்றது.
உருளைக்கிழங்கு- கற்றாழை ஃபேஸ் பேக்

சருமத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் C உருளைக்கிழங்கில் இயற்கையாகவே செரிந்து காணப்படுகின்றது. இதன் சாற்றை நேரடியாக முகத்தில் தடவி வந்தால், சருமத்தில் எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.
உருளைக்கிழங்கு சாறு வயதான தோற்றத்தை குறைக்கிறது. முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் முகத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது. அதுபோல் சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், முகப்பருவை குறைக்கவும், முகத்தில் இயற்கையான ஒளிவீச்சை அளிப்பதிலும் கற்றாழை பெரிதும் ஆற்றல் காட்டுகின்றது.
இந்த ஃபேஸ்க்கை தயாரிக்க பாதியளவு உருளைக்கிழங்கைத் துருவி, அதன் சாற்றினை வடிகட்டி தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், வெயிலால் சருமம் கருமையாவதைத் முற்றிலும் தடுக்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |