காலை உணவுக்கு இந்த ரெசிபி செய்து கொடுங்க.. குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவாங்க
சுவையான காலை உணவான ஜவ்வரிசி உப்மா எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
ஜவ்வரிசி உப்புமா
பொதுவாக காலை எழுந்தவுடன் எப்போதும் ஒரே மாதிரியான இட்லி தோசை தான் காலை சாப்பாடாக சாப்பிட்டிருப்போம். ஆனால் இந்த சமயத்தில் எதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்.
இதை நாம் சீக்கிரமாக செய்து முடித்திடலாம். அது மட்டுமின்றி இது நிறைய ஊட்டச்சத்தை கொண்டது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் அல்லது கல்லூரிக்கு செல்பவர்கள் ஈஸியாக செய்யலாம்
அதை எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
ஜவ்வரிசி - 1 கப் (ஊற வைத்தது)
எலுமிச்சை - பாதி
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:
முதலில் தேவையான அளவு ஜவ்வரிசியை எடுத்து அதை நன்கு கழுவி பின் அதை 4 மனி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். அது நன்கு ஊறிய பின் அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அது நன்கு சூடானதும் அதில் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும் இது நன்கு பொரிந்தவுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

உருளை கிழங்கு சேர்த்து நன்கு வதக்கியவுடன் நாம் வறுத்து வைத்த வேர்கடலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இவை அனைத்தும் நன்கு வதக்கிய பின் நாம் ஊற வைத்து எடுத்து வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கிளறி விட வேண்டும். பின் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான ஜவ்வரிசி உப்மா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |