கோதுமை தோசையை ஒருமுறை மட்டும் இப்படி செய்து பாருங்க... சுவை தாறுமாறாக இருக்குமாம்
காலை உணவாக கோதுமை தோசையை வித்தியாசமாக செய்து சாப்பிடுவதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்று பெரும்பாலான நபர்களின் காலை உணவு இட்லி, தோசை இவையாகத் தான் இருக்கின்றது. சற்று வித்தியாசமாக கோதுமை மாவு கொண்டு தோசை சுட்டு சாப்பிட்டால் பலரும் அதை விரும்புவதில்லை.
தோசை மாவுடன் சில காய்கறிகளையும் சேர்த்து தோசை சுட்டால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ரவை - 1/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
கேரட் - 1 (துருவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் -1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உருளைக் கிழங்கை தோல் நீக்கி, பாத்திரம் ஒன்றில் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனுடன் 1 கப் கோதுமை மாவு, 1/2 கப் அரிசி மாவு, 1/4 கப் ரவை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் கிளறி விட வேண்டும்.
பின்பு அதில் தேவையான அளவு தண்ணீரை கட்டிவிடாமல் கரைத்துக் கொள்ளவும். ஒரு 30 நிமிடம் ஊற வைக்கவும்.
30 நிமிடத்திற்கு பின்பு துருவிய கேரட், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்ந்து கலந்து விடவும்.
மேலும் 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ், 1 டீஸ்பூன் மிளகு, 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கலந்து விடவேண்டும். மாவு கட்டியாக இருந்தால், அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை விட்டு நன்கு வேகவிட்டு திருப்பி போட்டு இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |