வாழைப்பூவில் பக்கோடா இப்படி செய்து பாருங்க... குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்களாம்
குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக வாழைப்பூ பக்கோடா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக குழந்தைகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் போது வீட்டில் ஏதாவது தீனி அவர்களுக்கு இருக்க வேண்டும்.
இதனை குழந்தைகள் மட்டுமின்றி வெளியே வேலைக்கு சென்றுவரும் பெரியவர்களும் விரும்புகின்றனர். இவ்வாறான தருணத்தில் வாழைப்பூவில் பக்கோடா எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.
குழந்தைகளுக்கு வாழைப்பூ சற்று துவர்ப்பான சுவையில் இருப்பதால் சாப்பிட அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். ஆனால் இவ்வாறு செய்து கொடுத்தால் நிச்சயம் சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்
வாழைப்பூ - சிறிது (பொடியாக நறுக்கியது)
கடலை பருப்பு - 100 கிராம்
உப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - 3
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
கடலை பருப்பை நீரில் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கு ஏற்ப உப்பு, சோம்பு, வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த பருப்பை அகலமான பாத்திரத்தில் போட்டு அதில் வெங்காயம், வாழைப்பூ, கொத்தமில்லி, பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவற்றினை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.

மேலும் இதில் கடலை மாவு மற்றும் அரிசி மாவை சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் இறுக்கமாக பிசைந்து விட வேண்டும்.
கடைசியில் வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து அதில் சிறிய உருண்டையாக வடை கலவையை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பூ பக்கோடா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |