வீட்டிலேயே கலப்படம் இல்லாத நெய் - நறுமணத்துடன் எப்படி செய்வது?
வெறும் பத்து அல்லது பதினைந்து நிமிடத்தில் வீட்டிலேயே எப்படி கலப்படம் இல்லாத நெய் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
நெய்
தமிழர்களின் உணவு பண்பாட்டில் நெய் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை நாம் கடைகளில் வாங்கும் போது சிலது கலப்படம் செய்து விற்கப்படுகின்றது.
இந்த காரணத்தினால் பலரும் வீட்டில் சிரமத்தை பார்க்காமல் நெய் தயாரிக்கின்றனர். அப்படி கலப்படம் இல்லாத அரோக்கியமான நெய் எப்படி வீட்டில் தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

நெய் நன்மைகள்
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் (A, D, E, K) மற்றும் பியூட்ரிக் அமிலம் (butyric acid) ஆகியவற்றின் சிறந்த மூலமாகும்.
இது செரிமானத்தை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், மூளை மற்றும் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க எதவுதல் என பல வேலைகளை செய்கிறது. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் அது இன்னும் நன்மையே.

நெய் தயாரிக்கும் முறை
வீட்டிலேயே நெய் தயாரிக்க ஒவ்வொரு நாளும் காய்ச்சிய பாலில் இருந்து ஆடையை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டும். இந்த பாலாடை கட்டி உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்தால் போதும்.
இதன் பின்னர் சேர்த்து வைத்த பால் ஆடையை மிக்ஸியில் போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி நன்றாக அடிக்க வேண்டும். இப்படி அடிக்கும் போது வெண்ணெய் தனியாக பிரிந்து வரும்.

பிரித்த வெண்ணெயை அதன் மோர் வாசனை போகும் வரை 2 அல்லது 3 முறை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும். பின்னர் ஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு மிதமான தீயில் உருக்கவும்.
இப்படி உருக்கும் போது நீர் ஆவியாகி போய் நெய் மட்டும் உருகி தனியே பிரியும். பின்னர் நல்ல பொன்னிறத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு கண்ணாடி போத்தலில் ஊற்றினால் சுத்தமான நெய் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |