இந்த பொருள் சேர்த்து ஹேர் ஆயில் செய்து போடுங்க.. எல்லா தலைமுடி பிரச்சினைக்கும் தீர்வு
தலைமுடி உதிர்வு துவக்கம் பொடுகு பிரச்சினைகள் வரை அனைத்திற்கும் நிரந்த தீர்வை ஹேர் ஆயில் தெருகிறது.
இப்படியான தலைமுடி பிரச்சினைகள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், அதனை கண்டுபிடித்து சிகிச்சை கொடுக்காவிட்டால் பக்க விளைவுகளால் நாம் அவதிப்பட வேண்டியிருக்கும்.
சிலருக்கு உச்சந்தலையில் இன்ஃபிளமேஷன், இறந்த செல்கள் இல்லாமல் வைத்திருப்பதும் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்க வேண்டியதும் முக்கியம். இதனை சரிச் செய்வதில் வீட்டில் செய்யும் எண்ணெய் முதல் இடம் வகிக்கிறது.
அந்த வகையில் எல்லா தலைமுடி பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்
- வெந்தயம் - 4 ஸ்பூன்
- கருஞ்சீரகம் - 4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 2 கைப்பிடி
எண்ணெய் தயாரிப்பு முறை
மேற்குறிப்பிட்ட அளவுகளில் எண்ணெய் தயாரிக்கும் பொழுது பொருட்கள் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் உங்கள் தலைமுடிக்கு ஏற்ப அளவை கூட்டி குறைத்து கொள்ளலாம்.
கறிவேப்பிலை, வெந்தயம், கருஞ்சீரகம் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு ஈரம் இல்லாமல் தனியாக வைக்கவும்.
அதன் பின்னர், ஒரு இரும்புக் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, நன்றாக சூடாக்கவும். அதில் இடித்து வைத்திருக்கும் வெந்தயம், கறிவேப்பிலை, கருஞ்சீரகம் கலவையை ஒன்றாக சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து 10-15 நிமிடங்கள் காயவிட்டு எண்ணெய் நிறம் மாறியதும் இறக்கவும். பின்பு எண்ணெய் நன்கு ஆறியதும் அதை ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கலாம்.
பலன்கள்
- கேரள பெண்களின் தலைமுடியை போன்று உங்கள் தலைமுடியும் நன்றாக வளரும்.
- தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலை முதல் முடியின் நுனி வரைக்கும் நன்கு மாய்ஸ்ச்சராகவும் ஹைட்ரேட்டிங்காகவும் வைத்துக் கொள்ளவும்.
- இந்த எண்ணெயில் கறிவேப்பிலை பயன்படுத்துவதால் தலைமுடிக்கு தேவையான இரும்புச்சத்து, புரதம் இரண்டு கிடைக்கும். இதனால் தலைமுடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென தலைமுடி வளரும்.
- கறிவேப்பிலை எண்ணெயில் சேர்ப்பது மட்டும் அல்லாமல் உங்கள் டயட்டிலும் சேர்த்து கொண்டால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |