வீட்டிற்குள் குல தெய்வ சக்தி எப்படி எளிய முறையில் அழைக்கலாம்?
பொதுவாக குலதெய்வம் என்பது பெரும்பாலும் ஒரு பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த ஆண் அல்லது பெண்ணை கடவுளாக பூஜித்து வணங்கப்படும் தெய்வமாகும்.
ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு.
அந்தவகையில் குலதெய்வத்தை நாம் எளியமுறையில் ஒரு சில பரிகாரம் செய்து வீட்டிற்கு அழைக்கலாம். அது எப்படி என்தை பார்ப்போம்.
பரிகாரம்
- ஒரு கலச சொம்பில், சிறிதளவு வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய், பன்னீர் ஆகியவற்றை போட வேண்டும்.
- பன்னீர் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
- பின்னர் அந்த கலசம் முழுவதும் நூலைச் சுற்ற வேண்டும். நூல் சுற்றத் தெரியாதவர்கள், பட்டுத் துணியை சுற்றலாம்.
-
பின்னர் வீட்டின் பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதன் மீது வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி பரப்பி, அதன் மீது கலச சொம்பை வைக்க வேண்டும்.
- கலசத்தின் மீது வாழைப்பூவை, நுனிப் பகுதி மேல்நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.
- வாழைப்பூவுக்கும், கலசத்திற்கும் இடையில் மாவிலை அல்லது வெற்றிலை சுற்றி வைக்க வேண்டும்.
- பின்னர் கலசத்திற்கு வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
- கலசத்தின் மீது வைத்திருக்கும் வாழைப்பூ, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். பூஜை செய்வதற்கு அந்த மூன்று நாட்களே போதுமானது.
- தொடர்ந்து பூஜை செய்ய விரும்புவர்கள், வாழைப்பூவை மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
- பூஜை முடிந்ததும் பச்சரிசியை சமையல் செய்தும், வாழைப்பூவை வடை செய்தும், அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
செய்யவேண்டியவை
கலசத்தில் உள்ளவற்றை வீட்டைச் சுற்றி தெளித்தும், குளிக்கும் நீாில் விட்டு நீராடவும் செய்ய வேண்டும்.
அதோடு 'ஓம் பவாய நம, ஓம் சர்வாய நம, ஓம் ருத்ராய நம, ஓம் பசுபதே நம, ஓம் உக்ராய நம, ஓம் மஹாதேவாய நம, ஓம் பீமாய நம, ஓம் ஈசாய நம' என்ற மந்திரத்தை தினமும் 108 முறை காலை மற்றும் மாலை வேளைகளில் பாராயணம் செய்து வரவேண்டும்.
