பொய் சொல்பவரை உடனே கண்டுப்பிடிக்கணுமா? இதை கவனித்தாலே போதும்!
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் தங்களுடன் பழகும் நபர்கள் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு.
பெரும்பாலும் நாம் ஒருவரை முதல் முறை பார்க்கும் போது, கண்மூடித்தனமாக அவர் உண்மையாக இருப்பார் என்றும் அவர் சொல்வதெல்லாம் உண்மையென்றும் நம்பிவிடுவோம்.
ஆனால் அனேகமான நேரங்களில் அப்படி நாம் நினைப்பது, நமக்கே ஆபத்தாக முடிந்து விடும். யாரிடம் பழகும் போதும் அவர்கள் நம்மிடம் எந்த மாதிரியான நோக்கத்துடன் பழகுகிறார்கள் என்பது குறித்து அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
உளவியல் ஆய்வின் அடிப்படையில் மற்றவர்கள் பொய் சொல்கின்றார்களாக என்பதை எவ்வாறு கண்டுப்பிடிக்கலாம் என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி கண்டறிவது?
பொய்யாக பழக வேண்டும், அல்லது பொய் சொல்ல வேண்டும் என்று நோக்கதுடன் பேசுபவர்கள் வெறும் வாயை மட்டும் உபயோகித்து சிரிப்பார்கள். இவர்ளின் கண்களில் ஒருவர் உண்மையாக சிரிக்கும் போது ஏற்படும் ஒளி இருக்காது. அதாவது முகம் பிரசாசிக்காது.
குறிப்பாக அவர்கள் கூறும் வார்த்தைக்கும், முக பாவத்துக்கு சம்பந்தம் இல்லாதது போல் தோன்றும். உதாரணத்திற்கு “உனக்காக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்று அவர்கள் கூறும் போது, அவர்களின் முக பாவம் வேறு ஒன்றை வெளிப்படுத்துவதை பார்கவும் உணரவும் முடியும்.
பொய் கூறுபவர்கள், பெரும்பாலான சமயங்களில் எதிரில் இருப்பவர்களின் கண்களை பார்த்து பேச மாட்டார்கள். பொய் கூறுவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சி காரணமாக அவர்கள், இப்படி செய்வதாக உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
ஆனால் ஒரு சில பொய்க்காரர்கள், நன்றாகவே கண்ணோடு கண் பார்த்து பேசுவார்கள். அதே போல, கண்ணை பார்த்து பேசுபவர்கள் அடிக்கடி கண் சிமிட்டினாலோ, பேசும் போது ரொம்ப இடைவேளி விட்டு பேசினாலோ அவர்கள் பொய் சொல்கின்றாரை்கள் என்று தான் அர்தம்.
காரணம் உண்மையை சொல்லும் போது யோசிக்க வேண்டிய தேவை இருக்காது. எனவே வார்த்தைகளுக்கு நடுவில் இடைவெளி தேவைப்படாது.
அதுமட்டுமன்றி பொய் சொல்பவர்கள் பதற்றம் அடிக்கடி முகத்தை தொடுதல், குறிப்பாக மூக்கு மற்றும் வாய் பகுதியை தொடுதல் போன்ற அறிகுறிகளை தங்களை அறியாமலேயே வெளிப்படுத்திடுவார்களாம்.
முடியை கைகளால் சீவுவது, விரல்களை மேஜை மீது வைத்து ஆட்டிக்கொண்டே இருப்பது, கால்களை ஆட்டிக்கொண்டே இருப்பது பொய் சொல்வதன் விளைவாகவே வெளிப்படுமாம். அது போன்ற அறிகுறிகள் இருந்தால் அந்த நபரிடம் ஜாக்கிரதையாக பழக வேண்டியது அவசியம்.

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |