பான் கார்டை வைத்து தனி நபர் லோன் வாங்குவது எப்படி?
இன்றைய காலக்கட்டத்தில் கடன் வாங்கும் பிரச்சினைகளைவிட அதை கட்ட சிரமப்படுவது தான் பெரியதாக உள்ளது. அதுவும் வளர்ந்து வரும் இணைய உலகத்தில் இருந்த இடத்தில் இருந்துகொண்டே கடன் தர பல போலி ஆப் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.
இதில், பயனாளர்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனிடையே பான் கார்டுக்கு வழியாக கூட நீங்கள் கடன் பெற முடியும். தனிநபர் கடனைப் பெற வேண்டும் என்றால், வாடிக்கையாளர்கள் சில ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பான் கார்டு இல்லாமல் வங்கிகளில் இருந்து பெரிய அளவில் பணம் எடுக்க முடியாது. ஆனால் பான் கார்டில் வங்கிகளில் கடன் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் நமது அடையாளத்தின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று பான் கார்டு.
கடன் பெறுவது எப்படி?
பெரும்பாலான வங்கிகள் பான் கார்டுகளில் ரூ.50,000 வரை கடன் வழங்குகின்றன. பான் கார்டுக்கு கடன் கொடுப்பதற்கு முன், எந்தவொரு வங்கியும் அல்லது NBFC வாடிக்கையாளர்களின் CIBIL ஸ்கோரை சரிபார்க்கும்.
இதிலிருந்து வாடிக்கையாளரின் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள நிறைகுறைகளை தெரிந்து கொள்ள முடியும்.
எவ்வளவு பெற முடியும்?
உங்கள் பான் கார்டு மூலம் ரூ.50,000 வரை தனிநபர் கடனை எளிதாகப் பெறலாம். 50,000 வரை எந்தப் பத்திரமும் இல்லாமல் வங்கிகள் கடன் தருகின்றன.
இருந்தாலும், உங்கள் CIBIL மதிப்பெண் நன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கடனைப் பெற முடியும். மேலும் இது பாதுகாப்பற்ற வகையின் கீழ் வரும். இதன்காரணமாக, வங்கிகள் பான் கார்டு மூலம் அதிக தொகையை கடனாக வழங்குவதில்லை.
ஆவணம்
உங்கள் பான் கார்டுக்கு எதிராக தனிநபர் கடன் வாங்க விரும்பினால், சில ஆவணங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்படி உங்கள் பணி அனுபவமும் அடங்கும். உங்களின் பணி அனுபவம் குறைந்தது இரண்டு வருடங்கள் இருந்தால் மட்டுமே பான் கார்டில் தனிநபர் கடனைப் பெறுவீர்கள்.
நீங்கள் வேலை அல்லது வணிகம் செய்து கொண்டிருந்தால் மட்டுமே, பான் கார்டில் தனிநபர் கடனைப் பெற முடியும்.