கல்லீரலை இயற்கையாகவே நச்சு நீக்கம் செய்வது எப்படி? ஆயுர்வேத மருத்துவம்
பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடலில் காணபப்படும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க வேண்டியது இன்றியமையாதது.
அந்த வகையில் உடல் உறுப்புகளுள் மிகவும் முக்கியமான உறுப்புக்களுள் ஒன்று தான் கல்லீரல். நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு இந்த உறுப்பு இன்றியமையாதது.
இந்த உறுப்பு 500 இற்கும் மேற்பட்ட தொழில்களை செய்கின்றது. உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பொதுவாகவே கல்லீரல் பாதிப்படைவதற்கு மதுபானம் மற்றும் புகைத்தல் ஆகியவற்றுடன் மரபியல் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது.
அதிகப்படியான மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படக்கூடியதாகவோ அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட நோய் காரணமாகவும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டு, கல்லீரல் பாதிப்படைய கூடும்.
கல்லீரல் பாதிப்பு மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயகரமான விறைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதனை தடுக்க ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில உணவுகள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி அதனை இயற்கையாக டீடாக்ஸ் செய்கின்றன.
இப்படி கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை இயற்கையாகவே வெளியேற்றும் உணவுகள் குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?
இஞ்சி: இஞ்சியானது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நொதியை தூண்டி, கல்லீரலுக்கான ரத்த ஓட்டம் சீராக கிடைக்க துணைப்புரியும். மேலும் கல்லீரல் பாதிப்பில் முக்கியமாக திகழும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை விரட்டும் ஆற்றல் இஞ்சியில் காணப்படுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி நீர் அருந்துவதும், உணவுகளில் இஞ்சியை தினசரி உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும்.
நெல்லிக்காய்: ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்க்கு முக்கிய முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை இயற்கையாகவே சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுவாக்குகின்றது.
தனியா: கொத்தமல்லி விதை என்னும் தனியா கல்லீரலுக்கு ஆடீராக்கியத்தை பாதுகாக்கும் அருமருந்து என ஆய்வேத மருத்துவ நிபணர்கள் குறிப்பிடுகின்றனர். காலையில் கொத்தமல்லி நீர் அருந்துவதும், காய்கறிகளில் பச்சை கொத்தமல்லியை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதும் கல்லீரலை சுத்திகரிப்பதில் ஆற்றல் காட்டுகின்றது.
பூண்டு: பூண்டில் காணப்படும் அல்லிசின் மற்றும் செலினியம் என்று கூறுகள் கல்லீரலை டீடாக்ஸ் செய்யும் சிறந்த ஆற்றல் கொண்டவை. இவை கொழுப்பு கல்லீரல் ஆபத்தையும் பெருமளவு தடுக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் பச்சை பூண்டு எடுத்துக் கொள்வது பலன் தரும்.
பீட்ரூட் : பீட்ரூட்டில் உள்ள பீட்டா அலனைன், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்குவதோடு, அதன் வீக்கத்தை குறைத்து செயல் சீராக செயல்பட பெரிதும் துணைப்புரிகின்றது.
கருமிளகு மஞ்சள் பால்: மஞ்சளில் உள்ள குர்குமின் கல்லீரல் சேரும் நச்சுக்களை நீக்குகிறது. அதில் கரு மிளகு சேர்த்து அருந்துவதால் இரட்டிப்பு பலன்களை பெற முடியும். இது கல்லீரல் பாதிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
எலுமிச்சை: வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள எலுமிச்சையை, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் கல்லீரலில் சேரும் நச்சுக்கள் இயற்கையாகவே வெளியேற்றப்படும். இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |