ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால்.. உடனே UPI பேமண்ட்ஸை செயலிழக்க என்ன செய்யவேண்டும்?
இன்றைய டிஜிட்டல் நவீன உலகில் அனைத்து விதமான பணபரிவர்த்தனைகள் எல்லாமே ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும், கூகுள் பே, போன்பே, பேடிஎம் என பல வகையான ஆப்ஸ்கள் வந்துவிட்டன.
மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அபரிவித வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் பணம் பெறுவது, கொடுப்பது மற்றும் மொபைல் ரீசார்ஜ் முதல் வீட்டு வாடகை வரை பெரும்பாலும் யுபிஐ பேமெண்ட்ஸ் (UPI Payments) மூலம் நொடியில் செலுத்தப்பட்டு விடுகிறது.
இதனையடுத்து யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface - UPI) நாட்டில் ஒரு முக்கிய கட்டண முறையாக மாறியுள்ளது. இதில், இந்தியாவை டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கின் ஒரு பகுதியாக நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய வணிக வங்கிகளும் யுபிஐ-க்கு ஆதரவளித்து வருகின்றன.
மேலும், UPI-ஐ பயன்படுத்தி BHIM மட்டுமின்றி ஃபோன்பே, கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்ட பல ஆப்கள் மூலம் மக்கள் எளிதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டிஜிட்டல் பேமெண்ட்ஸ்களை எளிதாக்கும் ஒரு அமைப்பாக இருந்து வரும் UPI வளர்ச்சியுடன், அதனை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்கள் கடின உழைப்பில் கிடைக்கும் பணத்தை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.
ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பண பரிவர்த்தனைகளில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் UPI பேமெண்ட்ஸ்களை வைத்திருக்கிறார் என்றால், ஒருவேளை அவர் தனது மொபைலை தொலைத்து விட்டால், முறைகேடுகளை தவிர்க்க UPI பேமெண்ட்ஸ்களை செயலிழக்கச் செய்வது முக்கியமான ஒன்று.
முதலில், நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்ஒர்க்கின் கஸ்டமர் கேர் சர்வீஸை தொடர்பு கொண்டு உங்கள் தொலைபேசி எண்ணை பிளாக் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை உங்கள் சிம் கார்டு அல்லது தொலைந்த மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி வேறு நபர்கள் அல்லது திருடர்கள் பரிவர்த்தனைகளை செய்வதை தடுக்க உதவும்.
அடுத்ததாக, தொலைந்து போன உங்கள் தொலைபேசி எண்ணை உங்கள் வங்கி கணக்கிலிருந்து பிளாக் செய்ய, நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் ஹெல்ப்லைனை அழைக்கவும். மேலும் அவர்களிடம் உங்களது UPI சர்வீஸை டிஸேபிள் செய்ய கோருங்கள்.
உங்கள் மொபைல் ஃபோன் இழப்பு குறித்து முதல் தகவல் அறிக்கையை (FIR) தாக்கல் செய்யுங்கள். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வசிப்பவர்கள் இதை ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்.
முக்கியமாக, நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) தளத்தின் FAQ பேஜில் ஒரு யூஸர் தன் மொபைல் ஃபோனை இழந்தால் மொபைல் எண்ணைத் பிளாக் செய்வது முக்கிய என்று குறிப்பிடும் அதே நேரத்தில், யூஸர்கள் தங்கள் யுபிஐ அணுகலை தடுக்க அனுமதிக்க எந்தவொரு தீர்வையும் குறிப்பிடவில்லை.