உள்ளாடைகள் விஷயத்தில் கவனம் தேவை!! அனைவரும் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்
பெரும்பாலும் வெளிப்புற ஆடைகளுக்கு அதீத முக்கியத்துவம் தரும் நாம், உள்ளாடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
கிழிந்து போன, பழைய, இறுக்கமான உள்ளாடைகளை அணிந்து கொண்டு தோல் நோய்களை நாமே விலைகொடுத்து வாங்குகிறோம்.
மிக முக்கியமாக அனைவருமே இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது தோல் சிவத்தல், தோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அவரவர் உடலுக்கு ஏற்றபடி இறுக்கமற்ற பருத்தி துணியாலான உள்ளாடைகளை அணியலாம்.
அதிலும், அலுவலகம், பள்ளி கல்லூரிக்கு செல்லும் நபர்கள் வீட்டுக்கு வந்தவுடன் சிறிய குளியல் போட்டுவிட்டு வேறொரு உள்ளாடையை அணிந்து கொள்ளலாம்.
இரவு, படுக்கைக்குச் செல்லும்போது, உள்ளாடைகள் அணிவதைத் தவிர்க்கலாம். இரவு, ஏழெட்டு மணி நேரமாவது நல்ல காற்றோட்டத்துடன் இருப்பது அவசியம்.
தோல் நோய்கள் இருந்தால் என்ன செய்வது?
உள்ளாடைகளை நன்கு துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டும், மற்ற ஆடைகளுடன் சேர்ந்து உள்ளாடையை சேர்த்து துவைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு தோல் நோய்கள் எதுவும் இருந்தால், உள்ளாடையை துவைப்பதற்கு தனி சோப் பயன்படுத்த வேண்டும்.
வெயிலில் காயவைக்க முடியாத பட்சத்தில் வீட்டுக்குள்ளேயே காய வைத்தால் அயர்ன்பாக்ஸ் கொண்டு அயர்ன் செய்வது அவசியம்.
மிக முக்கியமாக எந்த காரணதுக்காகவும் ஈரமான உள்ளாடையை அணியக்கூடாது.