மன வலிமையுடன் இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை கட்டாயம் செய்ங்க!
பொதுவாகவே வாழ்வில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என்றால் உடல் அளவில் வலிமையாக இருப்பதை விடவும் மனலிமையே அதிகம் முக்கியத்துவம் பெறுவதாக உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
உண்மை தான் எத்தைனையே மாற்று திறனாளிகள் சாதாரண மனிதர்களால் நினைத்துபார்க்கவே முடியாத விடயங்களை கூட சாதித்து காட்டியுள்ளார்கள்.

ஆனால் நம் மனதில் ஒரு விடயத்தை முடியாது என முதலிலேயே முடிவு செய்துவிட்டால் அது இறுதிவரையில் முடியாது தான்.
இதற்கு சிறந்த உதாரணம் மிருக்காட்சி சாலைகளில் பிரம்மாண்டமாக வளர்ந்த யானைகளை ஒரு சிறிய கயிற்றில் கட்டிவைத்திருப்பார்கள். அந்த யானை நினைத்தால் அதன் வலிமைக்கு அதனை சாதாரணமாக தகர்த்தெறிய முடியும்.

இருப்பினும் இது அந்த கயிற்றை விட்டு வெளியேற முடியாது என்பதை சிறியதாக இருக்கும் போதே நம்ம ஆரம்பித்தால், அந்த யானை அதே இடத்தில் நிற்கும். அப்படி தான் நம் மனமும் செயல்படுகின்றது.
நாம் எதை நம்புகின்றோமோ அதை தான் நம் உடலால் செயல்படுத்த முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அந்தவையில் மனதளவில் வலிமையானவர்களா மாற முக்கியமாக பின்பற்ற வேண்டிய 7 விடயங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மனவலிமை அதிகரிக்க...
1.வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை மாத்திரமே நினைத்து பார்ப்பதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு சின்ன சின்ன நல்ல விடயங்களுக்கும் பிரபஞ்சத்துக்கு நண்றி சொல்லும் குணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் கூட நண்றி என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் படுக்கைக்கு செல்லவே கூடாது இந்த பழக்கம் உங்கள் மனவலிமையை பெரிதும் அதிகரிக்கின்றது.
2.மற்றவர்களுடன் விவாதிப்பதை முற்றிலும் நிறுத்திவிடுங்கள். ஒரு விடயம் விவாதிக்கும் நிலைக்கு செல்கின்றது என்றால் எதிரில் இருக்கும் நபர் உங்கள் கருத்தை ஒரு போதும் காது கொடுத்து கேட்கப்போவதில்லை என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் அமைதியாக இருக்க கற்றுக்கொண்டால் உங்கள் மனவலிமை உச்சத்தில் இருக்கின்றது என்று அர்த்தம்.

3.எந்த நிலையிலும் உங்களின் வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை செய்யாதீர்கள். அவர் எவ்வளவு பெரிய நபராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் நீங்கள் தனித்துவமானவர் என்தில் மாற்றுக்கருத்து உங்களுக்கு ஒரு போதும் இருக்கவே கூடாது.
4.முக்கியமாக தனிமையில் வாழ்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ளுங்கள். மற்றவர்களுடன் நன்றாக பழகுங்கள் இருப்பினும் தனிமையிலும் உங்களால் மகிழ்சியாக வாழ முடியும் என்ற நிலையை நீங்கள் அடைந்துவிட்டால் உங்களை யாராலும் வெல்லவே முடியாது. மற்றவர்களால் தான் நீங்கள் மகிழ்சியாக இருக்க முடியும் என்ற எண்ணம் தான் பல நேரங்களில் நீங்கள் மனமுடைந்து போக முக்கிய காரணமாக இருக்கும்.

5. அழுவதை பலவீனம் என நினைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அழுவதில் அவ்வளவு பெரிய தவறு ஒன்றும் கிடையாது. மற்றவர்கள் முன்னிலையில் அழுவதையும் கூட சாதாரணமான எடுத்துக்கொள்ளுங்கள். அதுவே மனவலிமையின் உச்சம். அழுத பின்னர் மனம் தெளிவாகும் மீண்டும் வேலையில் இருமடங்கு வேகத்துடன் கவனம் செலுத்துங்கள்.
6. முக்கியமாக பேசும் போது மாத்திரமன்றி உங்களுக்கு நீங்களே சிந்திக்கும் போதும் கூட நேர்மறையான வார்த்தைகளை மாத்திரம் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது தான் உண்மையில் உங்களை பற்றி நீங்கள் எப்படி நினைக்கின்றீர்கள் என்பதன் பிரதிபலிப்பு.
7. நீங்கள் அடையும் சிறிய வெற்றிகளை மற்றவர்கள் பராட்ட வேண்டும் என எதிர்பார்க்காது, உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளும் வகையில், சிறிய பரிசுகை வாங்கிக்கொள்ளுங்கள். இந்த பழக்கம் மனவலிமையை பெரிதும் அதிகரிக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |