மருந்து பாட்டிலை திறந்த பின் எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்? எச்சரிக்கும் மருத்துவர்!
பொதுவாகவே மருந்து பாட்டில்களை முதலாவது முறை திறக்கும் வரையில், அதன் காலாவதி திகதி வரையில் அதனை பாவிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.
ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் காய்ச்சல், இருமல் மருந்து சிரப் பாட்டில்களை ஒரு முறை திறந்ததன் பின்னர் அதனை எவ்வளவு நாட்கள் வரையில், பாவிக்கலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும்.

இந்த குழப்பங்களுக்கு முற்றிலும் தீர்வு கொடுக்கும் வகையில், உணவு ஆலோசகரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவான விளக்கம் கொடுத்துள்ளார் இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திறந்த பின் எவ்வளவு காலம் பயன்படுத்தலாம்?
மாத்திரைகள் பெரும்பாலும் தனித்தனியாக பொக்கிங் செய்யப்படுவதால், இப்படியான பிரச்சனைகள் மாத்திரரைகளை பயன்படுத்தும் போது வருவது குறைவு.மாத்திரைகள் அதன் காலாவதி திகதி வரையில் அதன் வீரியத்துடன் இருக்கும்.

இருப்பினும் சில நேரங்களில் மாத்திரைகளை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கும் போது, அதன் நிலைத்தன்மையில் மாற்றங்கள் அரிதாக ஏற்படலாம்.
ஆனால் சிரப் வகைகள் அப்படி அல்ல என்பதால் சிரப் வகை மருந்துகளை பயன்படுத்தும் போது தான் அதிகம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குறிப்பாக சிரப்கள் குழந்தைகளுக்கு தாக் அதிகம் பரிந்துரைக்கப்டுகின்றன. எனவே அதை கையாளும் போது அளவுகளிலும் சரி, பாவனை காலம் தொடர்பிலும் சரி மிகுந்த அவதானம் அவசியம்.

பாராசிட்டமல் சிரப்
ஆய்வுகளின் பிரகாரம் பாராசிட்டமல் சிரப் பாட்டிலை ஒரு முறை திறந்த பின்னர் 5-6 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பாதுகாப்பு நோக்கம் கருதி, ஒரு 3-4 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்துவது சிறப்பு.
இருமல், சளி சிரப்
இந்த சிரப்புகளில் இனிப்புக்காக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த சிரப்புகளில் இதுக்குறித்து எந்த ஒரு ஆய்வுகளும் மேற்கொண்டதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சில நிபுணர்கள் 1-3 மாதம் வரை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். எனவே இப்படியான மருந்தை 3 மாதங்களுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்ப்பதே சிறப்பு என மருத்துவர் அருண்குமார் குறிப்பிடுகின்றார்.

பவுடர் வடிவில் காணப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள்
இந்த வகை மருந்தில் பவுடரில் தண்ணீரை கலந்துவிட்டால், 7-10 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவது ஆபத்தானது என எச்சரிக்கின்றார்.
இந்த வகை மருந்து பாட்டிலிலும் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே நீரை கலக்காவிட்டால், அதன் காலாவதி திகதி வரையில் தாராளமாக பயன்படுத்தலாம்.

சொட்டு மருந்துகள்(Eye, Ear Drops)
முக்கியமாக கண், காது, மூக்கு போன்றவற்றில் பயன்படுதப்படும் சொட்டு மருந்துகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். சொட்டு மருந்தை திறந்துவிட்டால், அதை 1 மாதம் வரையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்துவது ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கின்றார்.

பிற மருந்துகள் ஊசிகள்
மேமலும் இன்சுலின் போன்ற ஊசிகளை திறந்துவிட்டால், அதனை ஒரு மாத காலம் வரையில், மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
க்ரீம், ஜெல் - வலி மற்றும் காயங்களுக்கு பயன்படுத்தும் க்ரீம், ஜெல் போன்றவற்றை முதல் முறை திறந்ததன் பின்னர் , 3 மாதங்கள் வரையில் வைத்து பயன்படுத்தலாம்.( முறையாக சேமிக்கப்படும் பட்சத்தில் மட்டும்)
இன்ஹேலர் - மூச்சுத்திணறலுக்கு பயன்படுத்தும் இன்ஹேலரை அதன் காலாவதி திகதி வரையில் பயன்படுத்தலாம். காலாவதி திகதி அடிக்கடி சரிபார்த்துக்கொள்வது சிறப்பு.
சத்து மருந்துகள் - வைட்டமின் சத்து , இரும்புச்சத்து போன்ற சத்து மருந்துகளை 1 தொடக்கம் 3 மாதங்கள் வரையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் அருண் குமார் குறிப்பிடுகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |