பாம்புக்கு குரல் வலை இல்லையா! அப்போ சீறும் சத்தம் எப்படி உருவாகுதுன்னு தெரியுமா?
பொதுவாகவே பாம்புகள் சீறும் சத்தத்தை அனைவருமே வாழ்வில் ஒரு முறையாவது நிச்சயம் கேட்டிருப்போாம். ஆனால் பாம்புகளுக்கு குரல் வலை கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா?
குரல் வலை இல்லாத போதும் கூட நாகப்பாம்புகள் மற்றும் ராஜ நாகங்கள் எதிரிகளை அச்சுறுத்தும் நோக்கில் ஒரு சத்தத்தை எழுப்புகின்றது.

அதை தான் பாம்பு சீறும் சத்தம் (Hissing) என குறிப்பிடுகின்றோம். குரல் வலை இல்லாமலேயே எவ்வாறு இந்த சத்தத்தை எழுப்புகின்றன என்றால்,அதன் நுரையீரலில் இருந்து பெரியளவிலான காற்றை ஒரே நோரத்தில், தொண்டைப் பகுதியில் உள்ள குளோடிஸ் (glottis) எனும் சிறிய துளையின் வழியாக மிக வேகமாகவும், பலமாகவும் வெளியேற்றும்.
இந்த செயல்முறையின்போது தொண்டையில் உள்ள மென்மையான திசுக்கள் அதிர்வடைந்து, தான் இந்த சத்தம் உருவாகின்றது.

ஏன் பாம்பு சீறுகின்றது?
எல்லா வகையான பாம்புகளும் சீறலாம், ஆனால் சில பாம்புகள் இயற்கையாகவே மற்றவற்றை விட அதிகமாக சீறுகின்றன. காடுகளில் வாழும் பாம்புகள் சிறைபிடிக்கப்பட்ட பாம்புகளை விட அதிகமாக சீறும்.
காரணம் காட்டு பாம்புகள் பொதுவாக செல்லப்பிராணியாக அல்லது வேறு தேவைக்கான பிடிக்கப்பட்ட பாம்புகளை விட ஆபத்தில் உள்ளன, எனவே அவை நிச்சயமற்ற அல்லது ஆபத்தான சூழ்நிலைகளுக்கு சீறலுடன் எதிர்வினையாற்றப் பழகிவிடுகின்றன என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பொதுவாகவே பாம்புகள் எதிரிகளை பயமுறுத்துவதற்கும், வேட்டையின் போது இரையின் கவனத்தை திசை திருப்புவதற்கும் தான் அதிகம் சீறுகின்றன. மேலும் சூழ்நிலையால் தாங்கள் தொந்தரவை அனுபவிக்கும் போதும் இவ்வாறு சீறும்.
பொதுவாக பாம்பு இன்னொரு பாம்பை பார்த்து ஒருபோதும் சீறுவதில்லை. சீறுவது பாம்பு அல்லாத வேட்டையாடுபவர்களுக்கு மட்டுமே.

காரணம் இந்த சுவாரஸ்யமாக, ஒலியின் அதிர்வெண் அவற்றின் கேட்க முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதால், பாம்பு சீறுவதைக் பாம்பால் கேட்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாம்பு சீறும் சத்தத்தை துல்லியமாக பதிவு செய்துள்ள காணொளியொன்று தற்போது வெளியானி சமூக வலைத்தள பக்களில் பெருமளவானோரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |