ஒரு தடவை தக்காளி சட்னியை இப்படி செய்து பாருங்க... போட்டி போட்டு சாப்பிடுவாங்க
இட்லி, தோசைக்கு ஏற்ப ருசியான தக்காளி சட்னியை சற்று வித்தியமான ஸ்டைலில் எவ்வாறு செய்து அசத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தென்னிந்தியாவில் காலை உணவு என்றால் அது இட்லி, தோசையாகவே இருக்கும். இதற்கு சட்னி, சாம்பார் என வைப்பது வழக்கம். அதிலும் தக்காளி சட்னி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமாகவே இருக்கும்.
இங்கு சற்று வித்தியாசமான ஸ்டைலில் தக்காளி சட்னி எவ்வாறு வைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 4
தக்காளி - 4 (நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
வரமிளகாய் - 1

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்ததும், வேர்க்கடலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்.
இதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு இவற்றினை சேர்த்து சற்று வதக்கியதும், பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்.
பின்பு இதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்பு கொத்தமல்லி, புதினா, துருவிய தேங்காய் இவற்றினை சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து, பவுல் ஒன்றில் மாற்றி வைக்கவும். கடைசியாக சிறிதளது எண்ணெய்யை கடாயில் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து பரிமாறினால் வித்தியாசமான ஸ்டைல் தக்காளி சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |