படமெடுத்து நின்ற நாகப்பாம்பு! ஆக்ரோஷமாக பந்தாடிய நாய்: பாம்பின் நிலை என்ன?
நாய் ஒன்று நாகப்பாம்பு ஒ்ன்றினை கடித்துக் குதறிய சம்பவம் ஓசூரில் நடந்துள்ளது.
பொதுவாக பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டு காணப்படுவதால் மக்கள் அருகில் செல்வதற்கே அதிகமாக பயப்படுவார்கள். ஓசூர் சீதாராம் பகுதியில் உள்ள சிற்ப கலைக்கூடம் ஒன்றில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றுள்ளது.
இதனை அவதானித்த தொழிலாளர்கள் பதறியபடி நின்ற நிலையில், அங்கு வளர்த்து வந்த நாய் குறித்த பாம்பை கடித்துள்ளது. படமெடுத்த சீறிய பாம்பினை எந்தவொரு பயமின்றி கடித்து தூக்கி பந்தாடியும் உள்ளது.
இந்த நீண்ட நேர போராட்டத்தில் இறுதியாக பாம்பு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.