காய்க்காத எலுமிச்சை செடி இருக்கா? இந்த தேன் கலவையை தெளித்தால் போதும்
வீட்டில் இருக்கும் எலுமிச்சை செடி பூ பூத்தும் காய் பிடிக்காமல் இருந்தால் இந்த பதிவில் கூறும் தேன் கலவை உரத்தை போட்ட பின் எலுமிச்சை செடியிலும் நிறைய காய்களைப் பெறலாம்.
எலுமிச்சை செடி
சிலரது வீட்டில் எலுமிச்சை செடி பூத்து குலுங்கும் ஆனால் காய் மட்டும் வராது. இது ஏமாற்றமாக இருக்கும். ஆனால் என்ன செய்வது என்றும் சிலருக்கு தெரியாது.
என்ன தான் நாம் உரத்தை போட்டாலும் சில எலுமிச்சை செடிகளுக்கு அது ஒத்துப்போவதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உரம் தேவைப்படலாம்.
எலுமிச்சை செடி காய்க்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் அதன் வளர்ச்சியில் தேக்கம் ஏற்படுவதுதான். இதற்கு நீங்கள் கவாத்து செய்து வந்தால் நல்லது. இது செடிக்கு ஒரு வித அதிர்ச்சியை கொடுத்து, புதிய துளிர்களை வளரச்செய்யும்.
பூக்கள் பூக்கும் சமயத்தில் காய்க்காமல் இருப்பதற்கு மகரந்தச் சேர்க்கை சரியாக நடக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கு நாம் ஒரு அருமையான வழியை செய்யலாம்.
தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் போன்ற மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளை நாம் செடிகளை நோக்கி ஈர்க்க வேண்டும்.
இதற்கு ஒரு ஸ்பூன் தேனை எடுத்து, 2 ஸ்பூன் தண்ணீருடன் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்ற வேண்டும். எலுமிச்சை செடியில் பூக்கள் பூக்கத் தொடங்கும் நேரத்தில் இந்த தேன் கலந்த நீரை தெளித்து வர வேண்டும்.
இதை காலை அல்லது மாலை வேளைகளில் செய்வது நன்மை தரும். தேனின் இனிமையான வாசனை மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளை செடியை நோக்கி ஈர்க்கும்.
இந்த பூச்சிகள் வரும்போது, அவை பூக்களில் உள்ள மகரந்தத் துகள்களை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு எடுத்துச் சென்று, மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன. இதன் காரணமாக செடிகளின் பூக்கள் காய்களாக மாறும் சந்தர்பம் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |