வாரத்திற்கு 2 முறை போடுங்க.. வெளியில் தெரியும் நரைமுடிகள் காணாமல் போகும்
இளநரை ஒரு நபரின் தன்னம்பிக்கையை குறைக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இளநரைக்கான தீர்வுகளை தேட துவங்குவதற்கு முன் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம்.
இளநரை ஏற்படுவதற்கான சரியான காரணத்தை தெரிந்து கொண்டால் இலகுவில் பிரச்சினையை சரிச் செய்து விடலாம். இளநரை என்பது மரபணு, சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் போன்ற பல காரணங்களால் ஏற்படும்.
அந்த வகையில் இளநரையை ஏற்படுத்தக்கூடிய நமது அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றியும், அதனை சரிச் செய்ய வீட்டில் செய்யக்கூடிய ஹேர் பேக் பற்றியும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
இளநரை வருவதற்கான காரணங்கள்
1. மன அழுத்தம்:- நாள்பட்ட மன அழுத்தமும், பதட்டமும் ஆகிய காரணங்களால் தலைமுடி நரை விரைவாக வந்து விடும். அதிகப்படியான மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மெலனோசைட்டுகள் குறைய வாய்ப்பு உள்ளது. இது தான் கருப்பாக உள்ள தலைமுடியை வெள்ளையாக மாற்றும்.
2. ஊட்டச்சத்து குறைபாடு :- தலைமுடிக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக B12 ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, காப்பர் மற்றும் சிங்க் போன்ற மினரல்கள் அவசியம். ஏனெனின் இவை இளநரைக்கு எதிராக செயற்படுகிறது.
3. புகைக்கும் பழக்கம் :- புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இளநரை வர வாய்ப்பு உள்ளது. ஏனெனின் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள் அடங்கிய சிகரெட் ஹேர் ஃபாலிக்கல் உள்ளன. இது மெலனின் உற்பத்தியை சீர்குலையச் செய்கிறது.
4. மது பழக்கம்:- தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு இளநரை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடலுக்கு எவ்வளவு ஊட்டசத்துக்கள் கொடுத்தாலும் அவை உடலுக்கு உறிஞ்சப்படுவதை மது பானங்கள் தடுக்கிறது. இதனால் தலைமுடி மட்டுமல்லாமல் முழு உடலும் சேதமடையும்.
5. மோசமான தூக்கம்:- போதுமான அளவு தூக்கம் இல்லாமை அல்லது தரமான தூக்கம் பெற முடியாதவர்களுக்கு இளநரை பிரச்சினை வரும். குறைவான தூக்கம் உடலில் உள்ள அனைத்து செயற்பாடுகளையும் தடுக்கும்.
தேவையான பொருட்கள்:
- கரிசலாங்கண்ணி இலைப் பொடி – 2 மேசைக்கரண்டி
- வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
- மருதாணி இலை பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி
- தயிர் – 3 மேசைக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
தயாரிப்பு முறை
பேக்கிற்கு தேவையான வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
மறுநாள் காலையில் அதை நன்றாக அரைத்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
அதில் கரிசலாங்கண்ணி பொடி, கறிவேப்பிலை அரைத்து பேஸ்ட், மருதாணி இலை, தயிர், எண்ணெய் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து விடவும்.
இந்த ஹேர் பேக்கை தலைமுடியில் நன்றாக தடவி மசாஜ் செய்து சரியாக 30-40 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அதன் பின்னர், சாதாரண தண்ணீர் மற்றும் மைல்டான ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை போட்டால் அங்காங்கே வெளியில் தெரியும் இளநரை இல்லாமல் போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
