அடர்த்தியா முடி வளரணுமா? இந்த எண்ணெய் மட்டும் போதும்
தற்போது தலைமுடி பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். சூழல் மாசுபாடு மோசமான உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான பொருட்களைப் பயன்படுத்து காரணமாக முடி மிகவும் பலவீனமடைந்து வேகமாக உதிரத் தொடங்குகிறது.
ஒருவருக்கு தொடர்ச்சியாக முடி உதிர்வு ஏற்பட்டால் அதே இடத்தில் முடி வளர்ச்சி நின்றுவிடும். இதற்கு பெண்கள் ஏன் ஆண்கள் கூட பல்வேறு வகையான முடி எண்ணெய்கள், மற்றும் ஷாம்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.
இதில் இருக்கும் அதிகளவான இரசாயனங்கள் சருமத்திற்கு தீங்கை உண்டாக்கும். நாம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு கட்டலாம். இந்த பதிவில் தலை முடி உதிர்வை நிறுத்தி முடி வளர்ச்சியை துண்டும் சில வீட்டு வைத்திய முறைகளில் ஒன்றை இங்கு பார்க்கலாம்.
தலைமுடி வளர்ச்சி
முடி பிரச்சனைகளுக்கு விடைபெற கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்தலாம். கிராம்பு எண்ணெய் முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றும். கிராம்பு எண்ணெயின் ஊட்டமளிக்கும் பண்புகளுடன் பலவீனமான முடிக்கு ஊட்டமளிக்கும்.
இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை முடியின் வலிமையை மேம்படுத்தி , ஆரோக்கியமான மற்றும் அழகான தோற்றத்தை கொடுக்கும்.
கிராம்பு உச்சந்தலையின் எண்ணெய் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதன் மூலம், இது அதிகப்படியான வறட்சி மற்றும் க்ரீஸைத் தடுக்கிறது. இதனால் முடி வளர்ச்சி விரைவாக அதிகரிக்கும். இதனால் முடி வலுவாகவும், மீள்தன்மையுடனும், உடையக்கூடிய தன்மை குறைவாகவும் மாறும்.
கிராம்பு எண்ணெய் உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுவிக்கும். இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் தலையை சுத்தமாக வைத்திருக்கும்.
கராம்பு எண்ணை தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து பூசி அப்படியே வைத்து விட்டு நல்ல ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும். இதனால் முடி வளர்ச்சி அதிகமாகும்.
கிராம்பு எண்ணெயில் யூஜெனால் எனப்படும் ஒரு கலவை உள்ளது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுவதை மேம்படுத்துவதன் மூலம் நீளமான முடியை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |