இந்த இலையை அரைச்சு போடுங்க- சர்க்கரை வியாதியால் வரும் குழிப்புண்களுக்கு உடனடி தீர்வு
சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்பார்கள்.
ஏனெனின் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால் விரல்களில் குழிப்புண்கள் ஏற்படும்.
இதற்கு எவ்வளவு வைத்தியம் செய்தாலும் புண்கள் ஆறாது. மாறாக சில நாட்களின் பின்னர், சிகிச்சை பலனளின்றி விரலை துண்டித்து விடுவார்கள்.
அப்படி கொஞ்சம் நாட்கள் கடந்த பின்னர் காலையே துண்டு விடுவார்கள். காலையும்,விரலையும் அத்துடன் சேர்த்து பணத்தையும் சிலர் இழந்து விட்டு வலியுடன் போராடுவார்கள்.
அந்த வகையில், குழிப்புண்களால் அவஸ்தைப்படுபவர்கள் சில வீட்டு வைத்தியமுறைப்படி சிகிச்சை கொடுக்கலாம். இதனால் வெட்டும் நிலையில் உள்ள விரல்களை காப்பாற்றலாம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஆவாரம் இலை வைத்தியம்
இந்த இலையை அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியால் எடுத்து நல்லெண்ணெய் சேர்த்து சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.
இது போன்று ஒருநாள் விட்டு ஒவ்வொரு நாளும் கட்டி வந்தால் குழிப்புண்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் இறந்து புண்கள் ஆற ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |