ஆஞ்சியோ பிளாஸ்டி- பைபாஸ் மூலம் அடைப்புகளை நீக்குவது ஒரு பித்தலாட்டம்: விருது பெற்ற மருத்துவரின் பகீர் உண்மை
இதய அடைப்பை நீக்குவதை விட அதை அப்படியே விட்டுவிடுவது இதயத்தின் ஆயுளை நீடிக்கும் என்றும், பைபாஸ், ஸ்டன்ட் வைப்பது என அத்தனையும் வியாபார நோக்குடன் செய்யப்படும் களவாணித்தனம் என்கிறார் பிரபல இதய மருத்துவ நிபுணரான ஹெக்டே
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த "பெல்ல மோனப்ப ஹெக்டே." இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட ஒரு இதய மருத்துவர் (cardiologist).
இந்திய அரசின் "பத்ம பூஷன்" விருது பெற்றுள்ள ஹெக்டே, சிறந்த கல்வியாளரும் மருந்தியல் ஆராய்ச்சியாளரும் ஆவார்.
இதயத்தில் அடைப்பு இருந்தால்....
இதயத்தில் அடைப்பு இருந்தால் தயவுசெய்து அதனை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம், அடைப்புகள் Blocks அகற்றுகிறோம் என்கிற பெயரில் ஸ்டெண்ட்(stent)உதவியுடன் ஆஞ்சியோபிளாஸ்டி மூலமும் பைபாஸ் மூலமும் அடைப்புக்களை நீக்குவது ஒரு பித்தலாட்டம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இயற்கையாக இதயத்தில் ஒரு அடைப்பு உண்டாகுமாயின், நரம்பு தனக்குத்தானே வேறு ஒரு பாதையைக் கண்டுபிடித்து ரத்த ஓட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்கிறதாம். இயற்கை நமக்கு கொடுத்த வரம் அது.
ஆக்சிஜன் குறைந்த அளவு உள்ளிழுக்கப்படுவது இதயத்திற்கு நன்மையை தான் தரும் எனக் கூறும் ஹெக்டே, அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றுடன் எளிமையான "உடற்பயிற்சிகள்" செய்வதும்"மூச்சுப்பயிற்சி" செய்வதும் இதய அடைப்பை இயற்கையாகவே அகற்றும் என்கிறார்.
இதற்கு பதிலாக ஆஞ்சியோ செய்வது இருமடங்கு மீண்டும் இதய வலியை உண்டாக்கும் என்றும், பைபாஸ் செய்வது நான்கு மடங்கு வரை வலி வர வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ரத்த ஓட்டத்தை சீர் செய்ய இயற்கை மருந்து
தன்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவர் ஹெக்டே பரிந்துரைக்கும் மருந்து என்னவென்றால்,
காலை வெறும் வயிற்றில் ஒரு கைபிடி கொத்தவரங்காயை ஒடித்து, அதனுடன் பாதி எலுமிச்சம் பழத்தை விதைகள் நீக்கி, அதையும் நறுக்கி, எடுத்து மிக்ஸியில் அதை அரைக்கும் அளவுக்கு நீர் விட்டு அரைத்து, பின் அதனை வடிகட்டி, அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை (வெள்ளை சீனி அல்ல) கலந்து சுவையாக சாப்பிட்டுவர வலி குறையும், (இதனை சர்க்கரை நோய் உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாம்) உடலிலுள்ள அத்தனை நரம்புகளுக்கும் ஊடுருவிச்சென்று ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.
மேலும் ஒவ்வொரு நேரமும் சாப்பிடுவதற்கு முன்னால், இரண்டு வெண்டைக்காயை நீரில் கழுவி அப்படியே மென்று சாப்பிட்டு விட்டு, பிறகு உணவு சாப்பிட்டு வர ரத்த ஓட்டம் சீர்படும். எந்த மருத்துவரும் தேவையில்லை எந்த மருத்துவமும் தேவையில்லை.
எதை நீக்க வேண்டும்?
கொழுப்பு சார்ந்த உணவுகளை நீக்க வேண்டும் மது, மாமிசம், கடைகளில் வாங்கும் கார்ப்பரேட் எண்ணெய்கள், மைதா பொருட்கள், எண்ணெய்களில் பொறிக்கப்பட்ட பலகாரங்கள், வெள்ளை சீனி, பாக்கெட் பால், இவற்றையெல்லாம் விட்டு விலகி இருந்தாலே பூரண சுகம் பெறலாம் என தெரிவிக்கிறார்.
