மன அழுத்தத்தை குறைக்கும் காலிஃப்ளவர் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே அறியப்படுகின்றது.
காலிஃப்ளவரில் வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் செரிந்து காணப்படுகின்றது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும்.
மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
அதுமட்டுமன்றி காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடுகின்றது.
தினசரி உணவில் காலிஃப்ளவரை சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும். அவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த காலிஃப்ளவரில் எவ்வாறு அசத்தல் சுவையில் மசாலா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
காலிஃப்ளவர் - சாதாரண அனவில் ஒன்று
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
மஞ்சள் தூள் - கால் தே.கரண்டி
வரமிளகாய் - 4
தாளிக்க
கடுகு - அரை தே.கரண்டி
உளுந்து - அரை தே.கரண்டி
தட்டிய பூண்டு - 5
கடலைப்பருப்பு - அரை தே.கரண்டி
அரைப்பதற்கு
தேங்காய் - கால் மூடி
நிலக்கடலை - 2கைப்பிடி
தனியா -ஒரு கைப்பிடி
மிளகு -அரை தே.கரண்டி
வர மிளகாய் - 5
பூண்டு -ஒன்று
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
செய்முறை
முதலில் தேங்காய், பூண்டு தவிர அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்தையும் தனித்தனியாக வெறும் பாத்திரத்தில் வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நிலக்கடலையை தோல் நீக்கி நீர் சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சின்ன சின்ன துண்டுகளாகவும் நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பிரித்து வெந்நீரில் சிறிது நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் வறுத்து வைத்த மசாலாப் பொருட்களையும் தேங்காய் மற்றும் பூண்டுடன் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளித்து, அதில் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்த தட்டி வைத்துள்ள பூண்டை சேர்த்து தாளித்து, பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்துக்கு வதக்கி பின்னர் அதில் அரைத்த மசாலாவையும் விழுதை சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பின்னர் தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கிளறிவிட்டு பின் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி தேவையான அளவு நீர் சேர்த்து நன்றாக வேகவிட வேண்டும்.
மசாலா நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் காலிஃப்ளவர் மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |