பிரம்மமுகூர்த்தம்: தொடர்ந்து 48 நாட்கள் அதிகாலையில் எழுவதால் உடலில் ஏற்படும் வினோத மாற்றங்கள்!
நாள் முழுக்க உழைக்கும் ஆற்றல் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு தூக்கம் முழுமையானதாக இருக்க வேண்டும். ஒரு மனிதன் சராசரியாக தினமும் 6 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியம்.
அதே போன்று அதிகாலை எழுவதும் முக்கியம். அப்படி செய்வதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருப்பது மிக முக்கியமான ஒன்றாகும். சூரிய உதயத்திற்கு முன்பாக சரியாக ஒன்றரை மணி நேரமே பிரம்ம முகூர்த்தம் நடக்கிறது.
இந்த நேரத்தில் நமது மன அமைதியின் நிலை உச்சத்தில் உள்ளது. படிக்கும் பிள்ளைகள் இந்த நேரத்தில் படிக்க அறிவுறுத்தப்படுகிறது. இன்றைய நவீன அறிவியலின்படி, நமது உடலின் சர்க்காடியனின் ஒரு பகுதியான மெலடோனின் அளவு இரவு உச்சத்தில் இருந்து சூரியன் உதயத்தின் போது குறைகிறது.
மெலடோனின் என்பது மனநிலையை நிலைப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இது அறிவாற்றலை மேம்படுத்தலாம். மன அழுத்தத்தை எதிர்க்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகாலை நேரங்களின் அதிகமாகும். மெலடோனின் அளவுகளில் குறைஉம் போது மன அழுத்த எதிர்ப்பு ஹார்மோன். கார்டிசோல் அதிகரிக்க செய்கிறது.
மேலும், பிரம்ம ஞானத்தை அடைவதற்கு பிரம்ம முகூர்த்தம் தான் சிறந்த நேரம். பிரம்ம ஞானம் என்பது உயர்ந்த அறிவியல், உயர்ந்த அறிவு மற்றும் முழுமையான மகிழ்ச்சி ஆகும்.
இந்த நேரத்தில் நம்மை சுற்றி இருக்கும் வளிமண்டலமும், மனமும் அமைதியாக இருக்கும்போது நல்ல எண்ணங்களும் அதை செயல்படுத்தும் பாதைகளும் தெளிவாக புலப்படும். அதிகாலை எழுவதால் பலரின் எண்ண அலைகளை தாண்டி நீங்கள் சாதிக்க முற்படுவீர்கள்.
அதுவும், 3.30 மணி இருந்து 4 மணிக்குள் இதை தொடர்ந்து 48 நாட்கள் இதை செய்து வந்தால் போதும், உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் உணர்வீர்கள். இந்த நேரத்தில் சுற்றுச்சூழல் அமைதியாகவும் இனிமையாகவும் மற்றும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
மன அழுத்தத்தைத் தளர்த்துவதற்கும் செய்வதை அனுபவித்து, மகிழ்ந்து செய்வதற்கும் இந்த நேரம் சிறந்த நேரமாகும்.
யோகா செய்தாலும் அல்லது தியானம் அல்லது நடைப் பயிற்சி மேற்கொண்டாலும் இந்த நேரத்தில் செய்யும் போது பலன்கள் அதிகமாக கிடைக்கும். எனவே இதை கண்டிப்பாக செய்துவருவர்கள் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடையவார்கள் எனக்கூறப்படுகிறது.