இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவரா? கோலியை போலவே ரோகித்துக்கும் ஆப்பு அடிக்கப்போகும் பிசிசிஐ!
டி 20 உலககோப்பையை வெல்ல இந்திய அணி அணியின் இளம்வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால், இந்திய அணி இங்கிலாந்துடன் ஒரு டெஸ்டி போட்டியை விளையாட இருக்கும் நிலையில், அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியையும் விளையாடுகிறது.
எனவே பல வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு ஒரு தரமான அணியை கொண்டு செல்ல வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் நினைப்பதால் தற்போது இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன.
மேலும், எதிர்வரும் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் 2 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ள ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மேலும் சில வாய்ப்புகள் அந்த அணியில் இடம் பெற்றிருக்கும்.
இதனிடையே, இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் கே.எல் ராகுல் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியுடன் பயணிக்கவில்லை என்பதனால் அடுத்த துணைக்கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்ய மீட்டிங் நடக்க உள்ளது.
அதோடு ஒரு நீண்ட கேப்டனை நாம் தேர்வு செய்ய வேண்டிய நோக்கில் ஹார்டிக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
அதே வேளை இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரோஹித்துக்கு அடுத்து இந்திய அணியின் முழுநேர கேப்டனாகவும் பாண்டியா நியமிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.