முடி கொத்து கொத்தா கொட்டுதா…..நிறுத்த இந்த ஒரு பரிகாரத்தை உடனே செய்யுங்க!
இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்னையாக தலை முடி உதிர்வு பிரச்னை மாறி வருகிறது.
முடி உதிர்தல் பிரச்னை என்பது நம் வாழ்வியல் அல்லது மரபணு சார்ந்த பிரச்னை என குறிப்பிடுவது வழக்கம்.
இப்படி இருக்க, முடி உதிர்தல் பிரச்னை ஏன் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் மட்டுமல்லாமல், ஜோதிடர்களும் சில விளக்கங்கள் தருகின்றனர்.

ஜோதிட விளக்கம்
முடியின் நீளம் மற்றும் அடர்த்தி செவ்வாய், குரு, ராகு போன்ற கிரகங்களுடன் நேரடியாக தொடர்புடையது.
செவ்வாய் கிரகம் நம் உடலின் ரத்தம் மற்றும் உடல் உஷ்ணத்துடன் தொடர்புடையது.
ஒருவருக்கு செவ்வாய் தோஷத்தால் முடியின் நீளத்துடன், முடியின் தடிமன் குறையத் தொடங்குகிறது.

அதுமட்டுமில்லாமல் ஒருவருக்கு ராகு மற்றும் குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தால் அவருக்கு முடி உதிரத் தொடங்குகிறது. உங்கள் ஜாதகத்தில் ராகுவின் சமநிலையற்ற நிலை இருப்பின் தனிப்பட்ட வாழ்க்கையில் தடுமாற்றம் இருக்கும்.
தற்போதுள்ள சூழலில் பல இளைஞர்களுக்குத் திருமணம் ஆகாமல் இருக்க முக்கிய காரணமாக முடி உதிர்தல் காரணமாக அதிக முடியை இழந்த சரியான சிகை அலங்காரம் இல்லாததும் காரணமாக கூறப்படுகிறது.
அழகான, அடர்ந்த தலை முடி கொண்ட நபர்களுக்கு அவர்களின் மன நம்பிக்கை அதிகரிப்பதாகவும், அது ஒரு வித ஆளுமையைக் கொடுப்பதாக உள்ளது.
ஒருவருக்கு அதிகமாக முடி உதிர ஆரம்பித்தால் அவருக்கு மன உளைச்சல் மற்றும் மனக்குழப்பம் அதிகரித்துவிட்டது என்பதைக் குறிக்கிறது. அதாவது அவருக்கு செவ்வாய் மற்றும் குரு பலவீனமான நிலையில் இருப்பதாக காட்டுகிறது.
பரிகாரம்
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரரை மனமுருகி வேண்டினால் தலைமுடி உதிர்தல் பிரச்னை தீரும் என நம்புகின்றனர்.
இங்கு ஆண், பெண் பக்தர்கள் தங்கள் தலைமுடியை காணிக்கையாக வழங்குவது வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கடவுள் பக்தி ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் ஆரோக்கியமான உணவு முறையும் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.