5 மடங்கு முடி அடர்த்தியாக வளரனுமா? வீட்டிலேயே எண்ணெய் தயாரிப்பது எப்படி?
என்னதான் மேக்கப் செய்துகொண்டாலும் ஒரு பெண்ணுக்கு கூந்தல் அழகுதான் உண்மையான அழகு.
விதவிதமாக ஹேர்ஸ்டைல் செய்துகொண்டு டிரெண்டில் அசத்தும் பெண்களுக்கு இளநரை, கூந்தல் வறட்சி, பொடுகுப் பிரச்னை போன்றவை தலையாய பிரச்னையாக இருக்கிறது.
இவற்றிலிருந்து விடுப்பட்டு அடர்த்தியான கூந்தல் பெற நீங்களே வீட்டில் என்னை தயாரித்து பயன்படுத்துங்கள்.
எப்படி எண்ணெய் தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் - 100 கிராம்
- கீழாநெல்லி இலை - 100 கிராம்
- கறிவேப்பிலை - 100 கிராம்
- செம்பருத்தி பூ - 100 கிராம்
- வெந்தயம் - 25 கிராம்
- கரிசலாங்கண்ணி இலை - 50 கிராம்
- தேங்காய் எண்ணெய் - 2 லிட்டர்
செய்முறை
மூலிகைகளையெல்லாம் வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து, மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும்.
மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத்தொடங்கிய உடன், அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். மூன்று நாள்கள் கழித்து எண்ணெய்யை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும்.
இந்த எண்ணெயை வாரம் 3 நாள்கள் பயன்படுத்தி வர, கூந்தல் வறட்சி இன்றி செழித்து வளரும்.