இனி நரைமுடிக்கு இரசாயன சாயம் எதற்கு? இந்த பொடியை பாலுடன் கலந்து பூசுங்க
நரை முடியைக் கருமையாக்க இரசாயன முடிச் சாயங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, இயற்கையாக கிடைக்கும் பொடியைப் பாலுடன் கலந்து பயன்படுத்தினால் நரைமுடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

நரைமுடி
சிறுவயதில் நரைமுடி வருவது தற்போது இருக்கும் இளைஞர்களின் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்காக பல இரசாயன பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமானது. அதிலும் இந்த இரசாயன பொருட்களை பயன்படுத்தினால் நீடித்த பெறுபேற்றை இது பெற்று தராது. தற்காலிக பளபளப்பை மட்டும் தான் கொடுக்கும்.
அதற்குப் பதிலாக இயற்கையில் கிடைக்கும் கரித்தூளைப் பாலுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் நரை முடியை எளிதாகக் கருமையாக்கலாம். இதை பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கரித்தூள் மற்றும் பால்
கரித்தூளைப் பாலுடன் கலந்து தடவினால், சில நிமிடங்களிலேயே நரை முடி கருப்பாக மாறிவிடும். கரித்தூளை மட்டும் பயன்படுத்துவது உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்யலாம்.
இதற்காக அதை பாலுடன் கலந்து தலைமுடியில் தடவுவது தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கும். முதலில், ஒரு பாத்திரத்தில் பாலும் கரித்தூளும் போட்டு நன்றாகக் கலக்கவும்.

பின்னர் அதை அடுப்பில் வைத்து கொஞ்சம் சூடாக்கவும். இந்தக் கலவை சிறிது கெட்டியாகி பசை போல மாறும் வரை குறைந்த தீயில் சூடாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். பின்னர், அதை ஆற விடவும். இப்போது இயற்கை ஹேர் டை தயார்.
இந்த பால் மற்றும் கரி கலந்த ஹேர் டையை முடியின் வேர்களிலிருந்து நுனி வரை தடவினால், நரை முடி உடனடியாக கருமையாகும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, உங்கள் தலைமுடியை மென்மையான ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
குறிப்பு - இந்த செயன்முறை இணையத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மூலம் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்லோருக்கும் உகந்ததா என்பது உறுதி இல்லை. உடலில் அல்லது தலையில் ஏதாவது பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையின் பின்னர் செய்யுங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |