குரு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்ட போகுது! யார் யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா?
குரு பகவான் தீபாவளி முடிந்து வக்ர நிலையில் இருந்து தனது இயல்பு நிலைக்கு திரும்பப் போகிறார்.
இதனால் சிலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கப்போகிறது.
இதனால் யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணிக்கும் குரு பகவான் தீபாவளிக்குப் பிறகு நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். கடந்த சில மாதங்களாக இருந்த மனச்சோர்வு, அழுத்தம், வேலைப்பளு முடிவுக்கு வரப்போகிறது. நவம்பர் 16 முதல் உங்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.
நிறைய வருமானம் வந்தாலும் கூடவே சுப செலவுகளும் துரத்தும்.
ரிஷபம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு உங்களுக்கு நிறைய லாபத்தையும் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும் தரப்போகிறார். லாட்டரி, ரேஸ் மூலம் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
மிதுனம்
உங்கள் ராசிக்கு குரு பயணம் சாதகமாகவே உள்ளது. தீபாவாளிக்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது. அஷ்டமத்து சனியும் உங்களை விட்டு விலகப்போகிறார் எனவே அதிர்ஷ்ட மழை உங்களுக்கு கிடைக்கப்போகிறது. திடீர் பண வரவினால் உங்களுக்கு சுப காரிய செலவுகளும் வரும்.