உணவளித்தவரின் இறுதிச்சடங்கிற்கு 5 கிமீ தூரம் நடந்து சென்ற நாய்! கண்ணீர் சிந்த வைத்த நெகிழ்ச்சி
நாய்கள் எப்போதும் விசுவாசமானது என கூற கேள்வி பட்டிருப்போம். ஒரு நாய் தங்கள் உரிமையாளருக்கு விசுவாசமாக இருப்பதற்கான ஆதாரமாக எண்ணற்ற சம்பவங்கள் நாட்டில் நடப்பதை நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்துள்ளோம்.
தற்போது மிகப்பெரிய எடுத்துக்காட்டான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நாட்டில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சூரத்தின் வெசு பகுதியில் சாத்வி என்ற 100 வயதான ஜெயின் துறவி காலமானார்.
அவரது இறுதி ஊர்வலத்தின் போது அவரது சடலத்துடன் நாய் சென்ற சம்பவம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. பியூஷ் வர்ஷா சாத்வி மகாராஜும் என்ற அந்த துறவி வெசு பகுதியில் ராமேஸ்வரம் குடியிருப்பில் வசித்து வந்தார்.
அந்த பகுதியில் ஒரு நாய் சுற்றி திரிந்தது. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்ததில் இருந்து அடிக்கடி நாய்க்கு உணவளிப்பார்.
சாத்வி காலமானபோது, உள்ளூர்வாசிகள் மற்றும் அவரது சீடர்கள் சிலர் இறுதி சடங்குகளுக்கு மரண எச்சங்களை தயார் செய்தனர்.
ஆனால் சாத்வியின் இறுதி யாத்திரை தொடங்கியதும் அவரது நாயும் பாடையின் கீழ் நடக்க ஆரம்பித்தது.
ஆரம்பத்தில், மக்கள் சிறிது நேரம் கழித்து நாய் ஊர்வலத்தை விட்டு வெளியேறிவிடும் என்று நினைத்தார்கள், ஆனால் சிலர் அது ஊர்வலம் முழுவதும் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இடையே நடக்க முடியாமல் அமர்ந்து விட்டது, ஆனால் மீண்டும் திரும்பி வந்து பல்லக்கின் அடியில் நடக்க ஆரம்பித்தது. யாத்ரா உம்ரா தகன மையத்தை அடையும் வரை அது அவர்களின் பக்கத்தை விட்டு வெளியேறவில்லை.
சத்வியின் உடல் தீயூட்ட அனுப்பப்பட்டபோது, நாய் அங்கேயே நின்று கொண்டிருந்தது, இறுதிச்சடங்கு முடியும் வரை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தது.
கடைசி சடங்குகள் முடிந்ததும், சிலர் நாயை ஒரு காரில் அழைத்துச் சென்று அது தங்கி இருந்த பகுதியில் விட்டுவிட்டனர்.
நாய் தனது வீட்டிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள உமாரா தகன மையத்திற்கு சடலம் உடன் நடந்து சென்றது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. ஏராளமானோர் நாய்க்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.