திருமணம் முடிந்து கிஃப்ட் பாக்ஸை திறந்த மாப்பிள்ளை - வெடித்து சிதறிய அதிர்ச்சி சம்பவம்!
திருமண பரிசாக வந்த பார்சலை திறந்து பார்த்த மணமகன் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தை சேர்ந்தவர் லதேஷ் காவித், இவருக்கும், கங்காபூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இதையடுத்து, பரிசாக வந்த பொருட்களை மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் பிரித்து பார்த்துள்ளனர். அப்போது இருந்த பார்சல் ஒன்றில் ரீசார்ஜ் செய்யக்கூடிய பொம்மை ஒன்று இருந்துள்ளது.
பின்னர் ரீசார்ஜ் செய்ய முயன்ற போது திடீரென அந்த பொம்மை வெடித்து சிதறியுள்ளது. இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
இதன் பின்னர் அவர்களை மீட்டு உறவினர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பெண்ணின் குடும்பத்தினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில், பரிசு பொருட்கள் மணப்பெண்ணின் மூத்த சகோதரியின் முன்னாள் காதலன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் பெயர் ராஜூ படேல் என்றும், மணமகளின் மூத்த சகோதரியை காதலித்ததாகவும், இருவரும் சில நாட்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாகவும், மணப்பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.