1 ரூபாய்க்கு இட்லி விற்ற பாட்டி... பிரபல தொழிலதிபர் மூலம் அடித்த பேரதிர்ஷ்டம்
கேந்திரா குழுமத்தின் தலைவரும் இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மகிந்திரா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இளைஞர்கள், சிறுவர்கள், முதியோர் என யாராக இருந்தாலும் அவர்களின் திறமைகள் குறித்த புகைப்படம்,வீடியோ இருந்தால் அதைப் பகிர்ந்து, தானும் கமெண்ட் கொடுப்பார்.
இவரது டுவீட் பதிவுகள் தினமும் வைரலாகும். இந்தியா முழுவதும் அவரது ஒவ்வொரு பதிவுகளும் கவனம் பெரும்.
இந்நிலையில், கோவையில் நீண்ட நாட்களாகப் பொருளாதாரம் விலை உயர்ந்தாலும் தன்னிடம் வரும் வாடிக்கையாளருக்கு ரூ.1க்கு 1 இட்டிலியை கொடுத்துச் சேவை செய்து வரும் பாட்டி ஒருவருக்கு ஆனந்த் மகேந்திரா நிலம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளார். அவரது சேவைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.