இளைஞர்களின் நாயகனாக வலம்வரும் கூகுள் CEO சுந்தர் பிச்சை: காலையில் எத்தனை மணிக்கு எழுந்து என்னவெல்லாம் செய்வார் தெரியுமா?
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வரும் சுந்தர்பிச்சை அவர்களின் காலை நேர பழக்க வழக்கம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக இந்திய அம்மாக்களின் வளர்ப்பில் வளரும் குழந்தைகளை ஒவ்வொரு நல்ல விடயத்தினைக் கூறி செதுக்கி வெளியுலகை அறிய வைப்பார்கள்.
அதிலும் அவர்களின் தாரக மந்திரமாக இருப்பது என்னவென்றால், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்பதே.... தற்போது இதனை அநேக குழந்தைகள் கடைபிடிப்பதில்லை.
அதிகாலையில் கண்விழித்தால், வாழ்வில் முன்னேறலாம், உங்களுக்கு வாழ்வில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் ஆணித்தரமாக நம்பும் இந்தியர்கள், தங்களுடைய மரபணுக்களைப் போலவே, ‘அதிகாலை எழுந்தால் சாதிக்க முடியும்’ என்பதைத் தலைமுறை தலைமுறையாக அடுத்தடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்வதில் தவறியதே இல்லை
இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், ஒட்டுமொத்த இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினர்களையும் அண்ணார்ந்து பார்க்க வைத்தவர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை.
சென்னையில் படித்து, தற்போது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் என்ற நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வரும் இவர் இன்றைய இந்திய இளைஞர்களின் நாயகனாக வலம்வருவது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 2016ம் அண்டு அளித்த பேட்டியின் போது தன்னுடைய காலை பழக்கத்தினை பற்றியும், அதில் அவர் செய்யும் சில விடயங்கள் குறித்தும் கூறியிருந்தார்.
கூகுள் CEO சுந்தர் பிச்சையின் காலை பழக்கம்
- தினமும் காலை 6.30 முதல் 7 மணிக்குள் எழுந்துவிடுவதுடன், செய்தித்தாள் படிக்கும் பழக்கமும் கொண்டவர். இவர் விரும்பிப்படிக்கும் செய்தித்தாள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல்.
- மேலும், காலை எழுந்தவுடன் தேநீர் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
- காலை சிற்றுண்டிக்கு, ஆம்லெட், பிரெட் டோஸ்ட் மற்றும் தேநீர் எடுத்துக்கொள்வார்.