நகை வாங்க போறவங்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி! இன்றைய தங்கம் விலை விபரம் என்ன?
கடந்த மாதத்தில் தங்கம் விலை குறைந்து வந்தாலும், இரண்டு நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் (அக்டோபர் 3) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,387 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்றைய முன்தினம் இதன் விலை 4,368 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்றைய முன்தினம் 34,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 152 ரூபாய் உயர்ந்து 35,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும், ஒரு கிராம் ஆபரண தங்கம் மும்பையில் ரூ.4,516 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,345 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,345 ஆகவும், கேரளாவில் ரூ.4,347 ஆகவும், டெல்லியில் ரூ.4,563 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,596 ஆகவும், ஒசூரில் ரூ.4,398 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,399 ஆகவும் இருக்கிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை நேற்றைய முன்தினம் ரூ.63.70 ஆக இருந்தது. நேற்று அது ரூ.64.60 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இலங்கையில் இன்று ஊரடங்கு கட்டுபாடுகள் நீக்கப்பட்ட நிலையில் நகைப்பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. யாழில், தங்கத்தின் விலையில் சரிவு கண்டுள்ளதாக தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கு, இன்றைய நிலவரப்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 500ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இதேப்போல் 22 கரட் தங்கத்தின் விலை 1 இலட்சத்து 7ஆயிரத்து 700ரூபாயாக விற்பனை செய்யப்படதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத்தொடர்ந்து, இலங்கையில் இன்னும் சில நாட்கள் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும் என தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.