நவராத்திரி கொண்டாட்டம்: மாத்திரைகளால் இளைஞர் உருவாக்கிய அம்மன் சிலை! ட்ரண்டாக புகைப்படம்
தற்போது நவராத்திரி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இளைஞர் ஒருவர் காலாவதியான மாத்திரைகள், ஊசி குப்பிகளை வைத்து துர்க்கை அம்மனின் சிலை ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
துப்ரி மாவட்ட நிர்வாகத்தின் ஊழியரான சஞ்சிப் பாசக்(37), கடந்த சில ஆண்டுகளில், COVID-19 நெருக்கடிக்கு மத்தியில், அவர் தனது படைப்புடன் ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பியுள்ளார்.
"ஊரடங்கின் போது, அத்தியாவசிய மருந்துகளை மொத்தமாக வாங்க மக்கள் மருந்துக் கடைகளுக்கு வெளியே வரிசையில் நிற்பதை நான் கவனித்த அவர், தொற்றுநோயைக் குறிக்க துர்க்கை அம்மனின் சிலையினை காலாவதியான மாத்திரைகள், ஊசி குப்பிகளை வைத்து உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கு ஐந்து மாதங்கள் உழைப்பினையும், 40 ஆயிரம் மாத்திரகைள், காப்ஸ்யூல்கள் மற்றும் வெவ்வோறு வண்ணங்களின் ஊசி குப்பிகளை வைத்து கச்சிதமாக சிலையினை செய்து முடித்துள்ளார்.
காகிதம், தெர்மோகோல் மற்றும் பலகை, மற்றவற்றுடன், மருந்து கீற்றுகளை ஒரு சட்டகத்திற்கு சரிசெய்து சிலையை உருவாக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக பசக் கூறியுள்ளார்.
Assam: Sanjib Basak, an artist from Dhubri has made an idol of Goddess Durga by using expired medicines.
— ANI (@ANI) October 24, 2020
He says, "This year too, I've tried to make a unique idol. Since everyone is thinking about #COVID19 treatment, I decided to make the idol using medicines." (24.10.2020) pic.twitter.com/zcrZOkdtKm
