காதலுக்காக வீட்டைவிட்டு வெளியேறிய 15 வயது பெண்; வேலை தேடி சென்ற இடத்தில் அரங்கேறிய சோகம்
காதலனோடு வீட்டைவிட்டு ஓடி வந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஒருவர் வன்கொடுமை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 27ம் தேதி பீகாரைச் சேர்ந்த 15 வயது பெண் ஒருவர் அவரது காதலருடன் வந்துள்ளனர்.
டெல்லி வந்த பின்பு வேலைக்கு சென்று தங்களது வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற கனவுகளோடு குறித்த ஜோடி வந்துள்ளனர்.
இவர்கள் ரயில் நிலையத்தில் நின்றபோது ஆட்டோ ட்ரைவர் ரவிக்குமார் என்பவர் வந்து விசாரித்துள்ளார். பின்பு தான் வேலை வாங்கித் தருவதாகக் கோரி, தன்னுடைய நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்றதோடு, காதலனை பொருட்கள் வாங்குவதற்கு வெளியே அனுப்பியுள்ளார்.
பின்பு அப்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார். குறித்த பெண் அழுதுகொண்டிருந்த தருணத்தில் காதலனிடம் நடந்த கொடுமையைக் கூறவே, பின்பு ஆட்டோ சாரதி இருவரையும் மிரட்டிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவைர் ரவியை கைது செய்துள்ளனர்.