Getti Melam: வீட்டைவிட்டு வெளியேறிய சிவராமன்! பெற்றோரை தேடி அலையும் துளசி, அஞ்சலி
கெட்டி மேளம் சீரியலில் வீட்டில் அரங்கேறிய பிரச்சனை காரணமாக சிவராமன் மனைவி லட்சுமியுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று கெட்டி மேளம். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணியளவில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், இதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
குடும்பத்தின் நடக்கும் நிகழ்வுகளை அருமையாக எடுத்துக் காட்டிவரும் இந்த சீரியலின் தற்போதைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அஞ்சலி தனது கணவரின் சைக்கோத்தனத்தை தெரிந்து கொண்டு தற்போது, அவரை பழிக்குபழி வாங்கி வருகின்றார். இந்நிலையில், சிவராமனின் இரண்டாவது மகன் செய்த செயலால் குடும்பம் பிரிந்துள்ளது.
ஆம் தனது மனைவியின் நகையை கவரிங்காக மாற்றி வைத்து அனைவரையும் ஏமாற்றியுள்ளார். இதனை துளசி கண்டுபிடித்த நிலையில், வீட்டில் வந்து உண்மையை உடைத்துள்ளார்.
இதனால் வீட்டில் இரண்டு மகன்களும் நடுவே கோடு போட்டு வாழ்ந்த நிலையில், தற்போது அம்மா, அப்பாவையும் வெளியேற்றியுள்ளனர். ஆம் மகனின் நடவடிக்கையை பார்த்த சிவராமன் மனைவியையும், தான் பெற்றெடுக்காத மகனையும் அழைத்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.
தாய் தந்தையை காணாமல் அஞ்சலி, துளசி இருவரும் போலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |