Getti Melam: கண்விழித்த பாட்டி... ரகசிய அறையை திறந்து அரண்டு போன அஞ்சலி! பரபரப்பான ப்ரொமோ
கெட்டி மேளம் சீரியலில் பாட்டி கண்விழித்து உண்மையைக் கூறிய நிலையில், அஞ்சலி ரகசிய அறையை திறந்து பேரதிர்ச்சியடைந்துள்ளார்.
கெட்டி மேளம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் கெட்டி மேளம் சீரியலில் சண்டே ஸ்பெஷல் என புதிய ப்ரொமோ காட்சி வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கணவரின் சைக்கோ செயல்களை அறிந்த அஞ்சலி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தானே சமாளித்து வருகின்றார். இந்நிலையில் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு மகன்கள் வெளியேறிய நிலையில், சிவராமன் வருமானத்திற்கு சிரமப்பட்டுள்ளார்.
இத்தருணத்தில் இரண்டு மகள்கள் சேர்ந்து அவருக்கு ஒரு கடையை வைத்துக் கொடுத்துள்ளனர். அப்பொழுது வெற்றியை போலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
வெற்றிக்கு ஆதரவாக யாரும் வாதாட முன்வராத நிலையில், அஞ்சலி களமிறங்கி அவருக்காக வாதாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கோமா நிலையில் உள்ள பாட்டி கண்விழித்து அனைத்து உண்மையையும் தனது மகன் சிவராமனிடம் கூறியுள்ளார்.
பின்பு அஞ்சலி மகேஷின் ரகசிய அறையை ஒருவழியாக திறந்துள்ளார். அங்கே மாஸ்க் அணிந்து பயமுறுத்தும் கெட்டப்புடன் இருந்த பெண்ணைக் அலறியுள்ளார்.
அடுத்தடுத்து அனைத்து உண்மைகளும் அம்பலமாகியுள்ளதால், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |