தமிழக பெண்ணை கரம் பிடித்த ஜெர்மனி வாலிபர்- காதலின் சுவாரசிய கதை
தமிழக பெண்ணை ஜெர்மனி இளைஞர் கரம் பிடித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூரை சேர்ந்தவர் லாசர். இவருடைய மரிய செல்வி. இவர்களுக்கு அனீஸ், அருண் என்ற 2 மகள்களும் உள்ளனர்.
அனு விண்ணிமேரி (29) என்ற மகள் உள்ளார். இதனிடையே அனு விண்ணிமேரி மேற்படிப்புக்காக ஜெர்மனி நாட்டுக்கு சென்று அங்கு பவேரியா மாகாணத்தில் ஜூலியஸ் மேக்சி மிலன் பல்கலைக்கழகத்தில் பயோ பிசிக்ஸ் துறையில் படித்தார்.
ஜெர்மனி இளைஞருடன் காதல்
இதனிடையே, அதே நிறுவனத்தில் பயோ பிசிக்ஸ் படித்துவிட்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரால்ப் என்பவரது மகனான பேட்ரிக் சிக்பிரிட் கோடல் (Patrick Siegfried Godel) 31 வயதுடைய நபரும் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றினார்.
இருவரும் அங்கு பழக்கம் ஏற்பட்டு முதலில் நண்பர்களாக பழகி பின்ன காதலிக்க தொடங்கினார்கள். இதனைத்தொடர்ந்து அனு விண்ணிமேரி தனது காதலை பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர்களும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பின், அந்த ஜெர்மனி இளைஞரும், தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
இரு குடும்பமும் உறவினர்கள் மத்தியில், ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கடந்த நாளில் கிறிஸ்தவ முறைப்படி திருமணத்தை நடத்தியுள்ளனர்.
திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்கு தாலி செயின் அணிவித்தார்.
இந்திய கலாச்சாரம் பிடித்தது
இதுகுறித்து ஜெர்மனி நபர், பேட்ரிக் சிக்பிரிட் கோடல் தெரிவிக்கையில், அனு விண்ணிமேரியுடன் பழகியதன் மூலம் எனக்கு இந்திய கலாச்சாரத்தின் மீது, இந்திய குடும்ப வாழ்க்கை முறையின் மீதும் அதிக நாட்டம் ஏற்பட்டது.
இதனால், ஈர்க்கப்பட்ட எனக்கு அனு விண்ணிமேரி மீது காதல் மலர்ந்தது. எனது காதலையும் திருமணம் செய்ய விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தேன்.
அவரும் காதலை ஏற்றுக்கொண்டு பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம். இங்கு விருந்தில் வித விதமான உணவுகள் வைக்கப்பட்டது. பரோட்டா, பிரியாணியும் மிகவும் அருமையாக இருந்தது என கூறியுள்ளார்.