தியேட்டரில் பெண்ணொருவர் செய்த கலாட்டா! இடைநிறுத்தப்பட்ட திரைப்படம்
கர்நாடகாவில் உள்ள திரையரங்கில் ஒன்றில் திரைபடம் ஓடிக்கொண்டிருக்கும் போது, பெண் ஒருவர் விசித்திரமாக நடந்து கொண்டு திரையரங்கில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
காந்தாரா திரைப்படம்
மங்களூரில் உள்ள திரையரங்கில் கன்னடத்தில் இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் திகதி வெளியான 'காந்தாரா' படம் ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது திரைப்படம் பார்பதற்கு வந்த பெண்ணொருவர் தொடர்ந்து அரைமணி நேரம் குச்சிலிட்டு கத்தியுள்ளார்.
இதனால் படத்தை திருத்தி வைத்துள்ளனர், பின்னர் சுயநினைவுக்கு திரும்பியதும் மீண்டும் படம் திரையிடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பலர் சமூக வலையத்தளங்களில் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.