பழங்களில் பூசப்படும் மெழுகுப்பூச்சு எல்லாமே கெட்டதா? என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்
பழங்கள் மற்றும் காய்கறிகளில் செயற்கையாக பூசப்படும் மெழுகுப் பூச்சிகள் ஏராளமான பாதிப்பை உண்டாக்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
எனவே இனி மேல் பழங்களை வாங்கும் போது எப்படி கவனித்து வாங்க வேண்டும்.
மேலும் பழங்களில் உள்ள இயற்கை மெழுகுக்கும் செயற்கை மெழுகுக்கும் என்ன வித்தியாசம் என அறிவோம்.
செயற்கை மெழுகுப் பூச்சு தேவையா?
பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஈரப்பதத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு தான் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள இயற்கையான மெழுகுப் பூச்சு உதவுகிறது. இது 80 - 95 %வரை ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.
ஆனால் பழங்கள் மற்றும் காய்கறிகளை பேக்கிங் செய்யும் போது கழுவுவதால் அவற்றின் மீதுள்ள இயற்கையான மெழுகுப் பூச்சு தேய்ந்து நீர் இழப்பை தருகிறது.
எனவே இந்த நீர் இழப்பை தடுக்க வியாபாரிகள் அதன் மேற்பரப்பில் செயற்கை பூச்சிகளை பூசுகின்றனர்.
பழங்களில் பூசப்படும் மார்போலின் போன்ற மெழுகு பூச்சு கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும்.
உணவில் பூசப்படும் மெழுகு பாதுகாப்பானதா என்பதை எப்படி அறிவது?
எஃப்டிஐஆர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி என்பது பல்வேறு மெழுகுகளின் மாதிரிகள் எஃப்டிஆர் ஸ்பெக்ட்ரோமீட்டர் வழியாக அனுப்பப்படும் ஒரு முறையாகும்.
அனைத்து இயற்கை மெழுகுகளிலும் செயற்கை மெழுகுகளில் இல்லாத எஸ்டர் குழு உள்ளது எனவே FSSAI இயற்கையான மெழுகுகளை மட்டுமே அனுமதிக்கிறது, எனவே எஃப்டிஆர் சோதனை செய்யப்பட்ட மெழுகு பூச்சுகள் தீங்கு விளைவிக்காது.
பக்க விளைவுகள்
உணவு சோதனை மையத்தால் அனுமதிக்கப்படாத மெழுகுகள் தீங்குகள் விளைவிக்கும்.
இது குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே இனி மேல் கடைக்குச் சென்று பழங்களை வாங்கும் போது FSSAI ஸல் அங்கீகரிக்கப்பட்ட பழங்களா என பார்த்து வாங்குங்கள்.
செயற்கை மெழுகுப்பூச்சு பழங்களை தவிர்ப்பது நல்லது. நன்மை அளிக்கும்.